என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேத்துமடை அருகே பெண் சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- பீரோவில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயின் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் சேத்துமடை அருகே உள்ள நரிக்கல்பதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். இவரது மனைவி மகாதேவி (வயது 38). இவர் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.
இவர் தனது வீட்டில் உள்ள பீரோவில் ரூ.40 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயினை வைத்து இருந்தார்.
சம்பவத்தன்று மகாதேவி பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த ரூ.25 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் 2 பவுன் தங்க செயின் ஆகியவை கொள்ளை போயிருந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து ஆனைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சத்துணவு அமைப்பாளர் வீட்டில் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story






