search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa statue"

    • ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
    • முதல்-அமைச்சர் இதில் உடனடி யாகத் தலையிட்டு, அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவுச் சின்னங்களையும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், தமிழ் சமுதாயத்திற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தலைவர்களையும் கவுரவிக்கும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குறை தற்போது தமிழ்நாட்டில் நிலவுகிறது.

    ஒட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் நினைவு இல்லம் சரியாக பராமரிக்கப்படவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

    எண்ணற்ற மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை அளித்து, தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்குவதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த புரட்சித் தலைவி அம்மாவை கவுரவிக்கும் வகையில் சென்னை, காமராஜர் சாலை, மாநில உயர் கல்வி மன்ற வளாகத்தில் அவருக்கு 9 அடி உயர வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, அந்த வளாகத்திற்கும் அம்மா வளாகம் என்றும் பெயர் சூட்டப்பட்டது.

    ஆனால் அங்கு பராமரிப்புப் பணிகள் சரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. இதுகுறித்து ஏற்கெனவே நான் முதல்-அமைச்சருக்கு அறிக்கை வாயிலாக வேண்டுகோள் விடுத்து இருந்தேன். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடி யாகத் தலையிட்டு, அனைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட்ட தலைவர்களின் நினைவுச் சின்னங்களையும் பராமரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதாவுக்கு புதிய சிலை வைக்கப்படுவதால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கும் புதிய சிலை வைக்க முடிவெடுத்துள்ளனர். #ADMK #Jayalalithaa #MGR
    சென்னை:

    ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 7 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை கடந்த 24.2.18 அன்று வைக்கப்பட்டது.

    இந்த சிலையை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர்.

    இந்த சிலை ஜெயலலிதா முகசாயலில் இல்லை என்று பலர் குறை கூறினர். சிலையை வடிவமைத்த ஆந்திராவை சேர்ந்த சிற்பி பிரசாத் கூறுகையில் தனக்கு போதுமான காலஅவகாசம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

    இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு புதிய சிலை அமைக்க முடிவு செய்து ஆந்திராவை சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலையை வடிவமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. அவர் ஜெயலிதாவின் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து வழங்கி உள்ளார்.

    அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஜெயலலிதா சிலை நிறுவும் பணி தொடங்கியுள்ளது.

    இந்த சிலை இப்போது ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு புதிய சிலை வைக்கப்படுவதால் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆருக்கும் புதிய சிலை வைக்க முடிவெடுத்துள்ளனர். இதற்காக எம்.ஜி.ஆர். சிலையும் ஆந்திராவில் தயாராகி வருகிறது.

    இந்த சிலையும் இன்னும் ஓரிரு நாளில் தலைமை கழகத்துக்கு வந்து விடும் என தெரிகிறது.

    எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா இருவரின் சிலைகளையும் புதிதாக நிறுவி ஒரே நாளில் திறப்பு விழா நடத்த தலைமை கழகம் முடிவெடுத்துள்ளது. அனேகமாக 28-ந்தேதி சிலை திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கான முன்னேற்பாடுகளை அ.தி.மு.க. தலைமை கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். #ADMK #Jayalalithaa #MGR
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஸ்ரீரங்கத்தில் சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #JayaStatue
    மதுரை:

    தமிழக முதலமைச்சராக பதவி வகித்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு பிரமாண்டமான நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



    கட்சி தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜெயலலிதாவின் சிலைகளை தங்கள் பகுதிகளில் திறக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அவ்வகையில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் மாநகராட்சி பூங்காவில் ஜெயலலிதா சிலை வைக்க அனுமதி கோரி உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக திருச்சி ஆட்சியரிடம் விளக்கம் பெற்று கோர்ட்டில் தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார். மேலும், வழக்கின் விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #JayaStatue

    ×