என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jammu kashmir encounter"

    • பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு படையினர் கொடுத்த பதிலடியில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    குல்காம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் உள்ள காடரில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

    அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். அங்கு, தேடுதல் நடவடிக்கை என்கவுண்டராக மாறியது. இதனால், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும், 2 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

    ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுண்டரில் அல் பதர் பயங்கரவாத இயக்கத்தின் கமாண்டர் உள்ளிட்ட 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். #JKEncounter #Al-BadrCommander
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடமாடும் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். அவ்வகையில் குல்காம் மாவட்டம் கத்போரா பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை கத்போரா பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.


    அல் பதர் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான ஜீனத்துல் இஸ்லாம் மற்றும் ஷகீல் தார் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், பல்வேறு பயங்கரவாத குற்றச்செயல்களுடன் அவர்களுக்கு தொடர்பு இருந்ததாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். #JKEncounter #Al-BadrCommander
    ×