search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jallikattu protest"

    • சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.
    • ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது கட்சி அலுவலகத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஆந்திர முதல்-அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் அவரது அரசின் கண்மூடித்தனமான முடிவுகளுக்கு ஆந்திரா பலியாகி உள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி தனது திறமையின்மை மற்றும் பழிவாங்கும் மனப்பான்மையால் போலவரம் திட்டத்தையும், அமராவதியையும் முற்றிலுமாக அழித்துவிட்டார்.

    தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அனைத்து சவால்களையும் முறியடித்து, மக்கள் நலனுக்கான சொத்துக்களை உருவாக்கும்.

    ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்தார்கள். அதுபோல ஆந்திர மாநிலத்தின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் ஏன் மக்கள் ஒன்றிணைய முடியவில்லை.

    சிதைக்கப்பட்ட மாநிலத்தை நிச்சயமாக மீண்டும் வளர்ச்சி பாதையில் கொண்டு வருவேன்.

    "மக்களுக்காக இன்னும் என்ன செய்ய முடியும் என்பதையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்," மாநிலத்தை பிரித்ததை விட, ஜெகன் அரசின் திறமையற்ற ஆட்சியால் மாநில மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    "நான் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டியின் நாசகார ஆட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்று நான் நம்புகிறேன்".

    தற்போது, தெலுங்கானாவின் தொலைதூரப் பகுதிகளில் கூட ஒரு ஏக்கருக்கு 50 கோடி ரூபாய், ஆந்திராவில் 10 ஏக்கருக்கு கூட இந்தத் தொகை கிடைப்பது மிகவும் கடினம் என்ற நிலை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி பரிந்துரை செய்யப்படும் என்றும் விசாரணை ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். #Jallikattu
    மதுரை:

    கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதில் மாணவர்கள் மீது தாக்குதல், காருக்கு தீ வைத்தது போன்றவை நடந்தது.

    இது தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இவர், இன்று இறுதிக்கட்ட விசாரணையை மதுரையில் தொடங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரையில் 14வது முறையாக இறுதி விசாரணை 3 நாட்கள் நடைபெறுகிறது, 112 பேரிடம் விசாரணை செய்யப்பட உள்ளது. 14வது கட்டமாக நடைபெறும் விசாரணையோடு மதுரையில் விசாரணை நிறைவு பெறும். விசாரணையில் காவல்துறை மற்றும் போராட்டக்காரர்கள் என இரு தரப்பினருக்கும் ஆதரவாக சாட்சியம் மற்றும் ஆவணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.


    ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை தள்ளுபடி செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மாணவர்கள் நலன் கருதி பரிந்துரை செய்யப்படும். ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னரும் போராட்டம் தொடரப்பட்டதை அலங்காநல்லூர் மக்கள் விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு அறிவிப்பு வந்தவுடன் போராட்டக்காரர்கள் பிரதமர் மோடி, அப்போதைய முதல்வர் (ஒ.பன்னீர் செல்வம்) பற்றி தவறாக பரப்புரை செய்யப்பட்டது வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

    போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படத்தினை போராட்ட களத்தில் வைத்து இருந்தது தெரியவந்தது. பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள் கூட விசாரணைக்கு வர மறுத்து விசாரணைக்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #JallikattuProtest
    ஜல்லிக்கட்டு விசாரணையில் கால தாமதம் என சொல்வது தவறு என்று விசாரணை ஆணைய தலைவர் ராஜேஷ்வரன் தெரிவித்துள்ளார். #Jallikattu #Rajeswaran
    கோவை:

    கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு தொடர்பாக மேற்கு மண்டல விசாரணை ஆணைய தலைவராக நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று கோவை வந்தார். விருந்தினர் மாளிகையில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு வந்துள்ளேன். 3 நாட்கள் விசாரணை நடத்தப்படும்.

    14.9.18 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 31-ந்தேதி வரை மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்கு மண்டலத்தில் 247 மனுக்கள் வந்துள்ளது. 56 மனுக்கள் கோவையிலிருந்து வந்துள்ளது.3 நாட்களும் கோவை மாவட்டம் மட்டும் தான் விசாரிக்கப்படவுள்ளது.

    கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக எந்த வழக்காக இருந்தாலும் விசாரிக்க வேண்டியுள்ளது எனது பணியாகும்.

    இன்று 7 வழக்கு, நாளை 7 , நாளை மறுநாள் 8 வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளது. மாதம் 12 முறை வந்து வழக்குகள் விசாரிக்கப்படும்.

    கோவை 56, நீலகிரி 11, ஈரோடு 44, திருப்பூர் 40, சேலம் 50, நாமக்கல் 16, கரூர் 3, திண்டுக்கல் 27, வத்தலக்குண்டு 1 என 248 மனுக்கள் பெறப்பட்டது.

    கோவை முடித்தவுடன் அடுத்தடுத்த மாவட்டங்களில் விசாரிக்கப்படும். கால அவகாசம் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் நிர்வாகத்தை கருத்தில் கொண்டு விரைவாக விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    ஜல்லிக்கட்டு விசாரணை கால தாமதம் என சொல்வது தவறு. உண்மையை கண்டு பிடிக்க விசாரணை ஆணையம் இருக்கிறது.

    விசாரணை ஆணையம் கண் துடைப்பு என்பது விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்காததால் அதுபோல் சொல்லப்படுகிறது.

    அறிக்கை சமர்பிக்க வேண்டியது தான் எங்கள் பணி. அதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அரசிடம் தான் கேட்க வேண்டும்.


    கோவை, சேலத்தில் ஜல்லிக்கட்டு விசாரணை முடிக்கப்பட்டு விட்டது. சென்னையில் நாள்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகம் முழுவதும் 547 வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக தொடரப்பட்டதால். எங்களை போன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டு விசாரணையை முடிக்க 6,7 மாதங்கள் ஆகும். மதுரையில் டிசம்பர் மாதம் முடிவடையும்.1956 சாட்சியங்கள் விசாரிக்க வேண்டியுள்ளதால் இந்த காலம் தேவைப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Jallikattu #Rajeswaran
    எம்.எஸ்.ராஜ் இயக்கத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் மெரினா புரட்சி படத்திற்கு மத்திய தணிக்கைக்குழு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. #MarinaPuratchi
    இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக இருந்த எம்.எஸ்.ராஜ் என்பவர் மெரினா புரட்சி என்ற படத்தை இயக்கி உள்ளார்.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக கொண்ட இந்த கதையில் அந்த போராட்டம் உருவானது எப்படி என்பது முதல் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை வரை அழுத்தமான பதியப்பட்டு இருந்தது.

    ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றிய புலனாய்வு படமாக உருவாகி இருந்த மெரினா புரட்சி படம் தணிக்கை குழுவுக்கு சான்றிதழுக்காக அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த மத்திய தணிக்கை குழு படத்திற்கு தடை விதித்திருக்கிறது.



    இது குறித்து எம்.எஸ்.ராஜ் விடுத்துள்ள அறிக்கையில் ’தமிழர்களின் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகெங்கும் வாழும் 10 கோடி தமிழர்கள் 8 நாட்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தையும், அதன் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகளைப் பேசும் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கை துறை தடை விதித்திருக்கிறது. மறுசீராய்வு குழுவில் மெரினா புரட்சி திரைப்படத்திற்கு நீதி கிடைக்கும். உண்மை வெல்லும் என்று நம்புகிறோம்’ என்று கூறி இருக்கிறார். #MarinaPuratchi

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பான விசாரணை 6 மாதத்தில் நிறைவடையும் என்று ஆணைய நீதிபதி ராஜேஸ்வரன் தெரிவித்தார். #Jallikattuprotest
    மதுரை:

    கடந்த 2016-ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதில் வன்முறை வெடித்தது.

    அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்திலும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

    மதுரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நீதிபதி ராஜேஸ்வரன் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தினார். இன்று 9-வது கட்ட விசாரணை தொடங்கியது.

    அப்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பலர் நேரில் ஆஜராகி நீதிபதியிடம் விளக்கம் அளித்தனர்.

    பின்னர் நீதிபதி ராஜேஸ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக 9-வது கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் பெறப்பட்டன.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வெளிநபர்கள் புகுந்ததால் வன்முறை நிகழ்ந்ததாக பலர் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்த விசாரணை இன்னும் 6 மாதத்தில் நிறைவடையும். அதன் பிறகு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Jallikattuprotest
    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக 8 மாத கால விசாரணைக்கு பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கூறினார். #Jallikattu
    மதுரை:

    ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு போராட்டம் வெடித்தது.

    மதுரை தமுக்கம் மைதானம், சென்னை மெரினா கடற்கரை, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. அவர் ஜல்லிக்கட்டில் நடைபெற்ற வன்முறை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரையில் இன்று 6-வது கட்ட விசாரணையை நீதிபதி ராஜேஸ்வரன் நடத்தினார். அரசு சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இந்த விசாரணையின் போது இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் விசாரிக்கப்பட்டனர்.

    தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி ராஜேஸ்வரன் இதுவரை 1,202 பேர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளனர். 8 மாத விசாரணைக்கு பிறகு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார். #Jallikattu
    ×