என் மலர்
நீங்கள் தேடியது "is our pride"
- 22,931 SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.
- மாடல் ஸ்கூல்ஸ் எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணி நிறைவடைந்ததைக் குறிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 SmartClassroom அமைக்கும் பணியைக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.
அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் நிறைவுபெற்றிருப்பதைத் தம்பி அன்பில் மகேஷ்
அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.
நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம்பெற உதவும் #ModelSchools எனப் பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!
அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் நடைபெறவுள்ளது.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘நம்ம செஸ், நம்ம பெருமை” விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'நம்ம செஸ், நம்ம பெருமை" விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வருகின்ற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 188 நாடுகளைச் சார்ந்த சுமார் 2500-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்குபெறவுள்ளனர்.
அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் தொடர்பாக ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






