என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "is our pride"
- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் நடைபெறவுள்ளது.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் ‘நம்ம செஸ், நம்ம பெருமை” விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஈரோடு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் 'நம்ம செஸ், நம்ம பெருமை" விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் வருகின்ற 28-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டியில் 188 நாடுகளைச் சார்ந்த சுமார் 2500-க்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் பங்குபெறவுள்ளனர்.
அதனடிப்படையில் மாவட்ட கலெக்டர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டிகள் தொடர்பாக ஈரோடு மாவட்ட பள்ளி மாணவ, மாணவியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 'நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு ஒட்டு வில்லைகள் ஒட்டப்பட்ட தனியார் பள்ளி வாகனத்தினை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சதீஷ்குமார் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்