search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "irrigation pond"

    • சுற்றுப்பகுதி விளைநிலங்கள் கரும்பு, நெல் என பசுமை பரப்பாக காட்சியளித்தன.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கரையில் அமைந்துள்ள ரோடு வழியாக செல்கின்றன.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா, கொழுமம் அருகே திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கோதையம்மன் குளம், 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அமைந்துள்ளது. என்.ஜி.,புதூர், மடத்தூர், மயிலாபுரம் மற்றும் குளத்துப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாக இக்குளம் உள்ளது.குளம் வாயிலாக நேரடியாக, 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு பாசன வசதி பெறுகிறது. முன்பு, பருவமழை காலத்திலும், திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு கோதையம்மன் குளம் நிரப்பப்படும்.

    இதனால்சுற்றுப்பகுதி விளைநிலங்கள் கரும்பு, நெல் என பசுமை பரப்பாக காட்சியளித்தன. இந்நிலையில், வரத்து ஓடைகள் முறையாக தூர்வாரப்படாதது, நீர்த்தேக்க பரப்பில் அதிகரித்த மண் மேடு உள்ளிட்ட காரணங்களால், குளத்தின் முழு கொள்ளளவில், தண்ணீர் தேக்குவது பாதித்தது. மேலும், குதிரையாறு அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் திறப்பதும் தடைபட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோதையம்மன் குளத்தில் போதிய தண்ணீர் தேங்காமல், சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதித்தது. சாகுபடி கைவிடப்பட்டு, விளைநிலங்கள் வெறுமையாக காட்சியளித்தன.கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, குளத்துக்கு அதிக நீர் வரத்து கிடைத்தது. தற்போதைய கோடை காலத்திலும், ஓரளவு நீர்மட்டம் உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    கோதையம்மன் குளத்துக்கு, குறிப்பிட்ட இடைவெளியில், குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.வரத்து வாய்க்கால் சீரமைப்பு, கரைகளை வலுப்படுத்துதல், ஷட்டர்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், இக்குளத்து பாசன பகுதி பயன்பெறும். விவசாயமும் அப்பகுதியில் செழிக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    கோதையம்மன் குளத்து கரையில் அமைந்துள்ள ரோடே, என்.ஜி.,புதூர் உட்பட பல கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கரையில் அமைந்துள்ள ரோடு வழியாக செல்கின்றன.இந்நிலையில் குளத்தை ஒட்டி தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, தேவையான இடங்களில் தடுப்பு அமைக்க வேண்டும் என்றனர். 

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் 750 பாசன குளங்கள் நிரம்பி விட்டன.
    நாகர்கோவில்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.

    திற்பரப்பு, அடையாமடை, பூதப்பாண்டி, நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, குளச்சல், குருந்தன்கோடு உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது.

    மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கொட்டி தீர்த்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

    ஆனால் பேச்சிப்பாறை அணையில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்குகேற்ப தண்ணீரை திறந்து விடவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடுவதால் சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    புத்தேரி, பொற்றையடி, பூதப்பாண்டி பகுதிகளில் உள்ள பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. மாவட் டம் முழுவதும் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்களில் 750 குளங்கள் நிரம்பி விட்டன. 500-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இறச்சகுளம் பகுதியில் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

    பாசன குளங்களில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். வழக்கமாக மாவட்டம் முழுவதும் 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டும் அதே அளவு பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 6.10 அடியாக உள்ளது. அணைக்கு 1,018 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 654 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.60 அடியாக உள்ளது. அணைக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 12.25 அடியாக உள்ளது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு நீர்மட்டம் 53.25 அடியாக உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 6.90 அடியாக உள்ளது.
    ×