search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாசன வசதிக்காக கோதையம்மன் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுமா?
    X

    காேப்புபடம்

    பாசன வசதிக்காக கோதையம்மன் குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுமா?

    • சுற்றுப்பகுதி விளைநிலங்கள் கரும்பு, நெல் என பசுமை பரப்பாக காட்சியளித்தன.
    • நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கரையில் அமைந்துள்ள ரோடு வழியாக செல்கின்றன.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் தாலுகா, கொழுமம் அருகே திருப்பூர்-திண்டுக்கல் மாவட்ட எல்லையில், கோதையம்மன் குளம், 400 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் அமைந்துள்ளது. என்.ஜி.,புதூர், மடத்தூர், மயிலாபுரம் மற்றும் குளத்துப்பாளையம் உள்ளிட்ட 20க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடி நீராதாரமாக இக்குளம் உள்ளது.குளம் வாயிலாக நேரடியாக, 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு பாசன வசதி பெறுகிறது. முன்பு, பருவமழை காலத்திலும், திண்டுக்கல் மாவட்டம் குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு கோதையம்மன் குளம் நிரப்பப்படும்.

    இதனால்சுற்றுப்பகுதி விளைநிலங்கள் கரும்பு, நெல் என பசுமை பரப்பாக காட்சியளித்தன. இந்நிலையில், வரத்து ஓடைகள் முறையாக தூர்வாரப்படாதது, நீர்த்தேக்க பரப்பில் அதிகரித்த மண் மேடு உள்ளிட்ட காரணங்களால், குளத்தின் முழு கொள்ளளவில், தண்ணீர் தேக்குவது பாதித்தது. மேலும், குதிரையாறு அணையிலிருந்து குறிப்பிட்ட இடைவெளியில், தண்ணீர் திறப்பதும் தடைபட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோதையம்மன் குளத்தில் போதிய தண்ணீர் தேங்காமல், சுற்றுப்பகுதியிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதித்தது. சாகுபடி கைவிடப்பட்டு, விளைநிலங்கள் வெறுமையாக காட்சியளித்தன.கடந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக, குளத்துக்கு அதிக நீர் வரத்து கிடைத்தது. தற்போதைய கோடை காலத்திலும், ஓரளவு நீர்மட்டம் உள்ளது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: -

    கோதையம்மன் குளத்துக்கு, குறிப்பிட்ட இடைவெளியில், குதிரையாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இதனால் நேரடியாகவும், மறைமுகமாவும், பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.வரத்து வாய்க்கால் சீரமைப்பு, கரைகளை வலுப்படுத்துதல், ஷட்டர்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்தால், இக்குளத்து பாசன பகுதி பயன்பெறும். விவசாயமும் அப்பகுதியில் செழிக்கும்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

    கோதையம்மன் குளத்து கரையில் அமைந்துள்ள ரோடே, என்.ஜி.,புதூர் உட்பட பல கிராமங்களுக்கு பிரதான வழித்தடமாக உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கரையில் அமைந்துள்ள ரோடு வழியாக செல்கின்றன.இந்நிலையில் குளத்தை ஒட்டி தடுப்புகள் இல்லாததால், இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் ஆய்வு செய்து, தேவையான இடங்களில் தடுப்பு அமைக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×