என் மலர்
நீங்கள் தேடியது "Indrani Mukerjea"
- ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
- இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
மும்பை :
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி தனது முதல் கணவருக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இந்திராணியின் 2-வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷியாம்வர் ராய் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்திராணியின் 3-வது கணவரான பீட்டர் முகர்ஜியும் கைதானார்.
பீட்டர் முகர்ஜியின் முதல் மனைவிக்கு பிறந்த மகன் ராகுல் முகர்ஜியை காதலித்ததால், ஷீனாபோராவை அவரது தாய் இந்திராணி கொலை செய்ததாக கூறப்பட்டது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
இவர் மீதான வழக்கை சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு விசாரித்து வருகிறது. இந்தநிலையில் சிறப்பு கோர்ட்டில் இந்திராணி முகர்ஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் ஷீனா போரா போன்று தோற்றமுடைய பெண்ணை கவுகாத்தி ரெயில் நிலையத்தில் 2 வக்கீல்கள் பார்த்ததாகவும், இதை உறுதி படுத்த விமான நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து இந்திராணி முகர்ஜியின் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய புலனாய்வு துறைக்கு சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
- ஷீனா அமெரிக்காவில் தங்கி படித்து வருவதாக இந்திராணி முகர்ஜி கூறி வந்தார்
- ஷியாம்வர் வேறொரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட போது உண்மை வெளிவந்தது
ஐஎன்எக்ஸ் மீடியா (INX Media) எனும் தொழில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றியவர் இந்திராணி முகர்ஜி (Indrani Mukerjea).
இந்திராணி முகர்ஜியின் முதல் திருமணத்தின் மூலம் அவருக்கு பிறந்தவர் ஷீனா போரா (Sheena Bora).
2012 ஆண்டிலிருந்து இந்திராணி முகர்ஜியின் மகள், ஷீனா போரா (24) பொதுவெளியில் காணப்படவில்லை. ஷீனா அமெரிக்காவில் தங்கி படித்து வருவதாக இந்திராணி முகர்ஜி தெரிவித்து வந்தார்.
2015ல் இந்திராணி முகர்ஜியின் கார் ஓட்டுனர் ஷியாம்வர் ரய் (Shyamvar Rai) ஒரு குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் நடைபெற்ற விசாரணையில், இந்திராணி முகர்ஜியும், அவரது முன்னாள் கணவரும் சேர்ந்து அவரது மகள் ஷீனா போராவை காரில் கொலை செய்ததாக தெரிவித்து அப்ரூவர் ஆனார்.
இதை தொடர்ந்து இந்திராணி முகர்ஜி கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைக்கு பிறகு நீதிமன்ற தீர்ப்பின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திராணியின் அப்போதைய கணவரான பீட்டர் முகர்ஜிக்கு அவரது முந்தைய திருமணத்தில் பிறந்த அவரது மகன் ராகுலுடன் ஷீனாவிற்கு இருந்த தொடர்பு இந்திராணிக்கு பிடிக்காததால் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இந்திராணி இந்த கொலையை செய்தார்.
சுமார் 4 வருட சிறைவாசத்திற்கு பிறகு 2020ல் மும்பை உயர் நீதிமன்றம் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், "இந்திராணி முகர்ஜியின் கதை: புதைக்கப்பட்ட உண்மை" எனும் தலைப்பில் டாகுமென்டரி தொடர் (docu-series) நெட்ப்ளிக்ஸ் (Netflix) தளத்தில் 2024 பிப்ரவரி 23 அன்று ஒளிபரப்பாக இருந்தது.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால் இவ்வழக்கை விசாரித்து வந்த மத்திய புலனாய்வு துறை (CBI) இந்த தொடர் ஒளிபரப்பானால் வழக்கு விசாரணையின் போது ஒருதலைபட்சமாக கருத்து உருவாக சாத்தியக்கூறு உள்ளதாக கூறி வழக்கு விசாரணை முடியும் வரை, தொடரை ஒளிபரப்ப தடை கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

நேற்று, மும்பை உயர் நீதிமன்றம், சிபிஐ-யின் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதை தொடர்ந்து விரைவில் இந்த தொடர் ஒளிபரப்பப்படும் என தெரிய வந்துள்ளது.


முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, மகள் ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் விசாரணைக்காக பிப்ரவரி 7ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜர்படுத்தும்படி கடந்த மாதம் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்பிறகு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அமைப்பிடம் கருத்து கேட்கப்படும். சிபிஐ அளிக்கும் பதிலின் அடிப்படையில் இந்திராணி முகர்ஜிக்கு மன்னிப்பு வழங்கி அரசுத் தரப்பு சாட்சியாக சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி, அரசுத் தரப்பு சாட்சியமாக சேர்க்கப்பட்டால், கார்த்தி சிதம்பரத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தலாம். #INXMediaCase #IndraniMukerjea #KartiChidambaram

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2016-ல் ஆண்டில் கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறைதவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மும்பை சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி சார்பில் பலமுறை தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், மும்பையில் உள்ள பைக்குலா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணிக்கு குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முதுகுத்தண்டு வடம் வழியாக மூளை பகுதிக்கு ரத்தம் பாய்ச்சும் நரம்புகளில் அடைப்பு ஆகியவற்றுக்காக சிகிச்சை அளிப்பதற்காக மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்குமாறு சிறை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதைதொடர்ந்து, இன்று பிற்பகல் அவர் ஜே.ஜே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். #IndraniMukerjea #JJHospital
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, கடந்த மாதம் இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. #SheenaBoraMurderCase #IndraniMukerjea #CBICourt








