search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "illegally"

    • நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் பெயரில் ரியல் எஸ்டேட் அமைக்கப்பட்டு இருந்தது.
    • மேலும் ரியல் எஸ்டேட் அனுமதி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற சொன்னார்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, நல்லாம்பாளையம் பகுதியில் தனியார் பெயரில் ரியல் எஸ்டேட் அமைக்கப்பட்டு இருந்தது. இதற்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாக ஊராட்சி மன்ற உறுப்பினர் கதிரேசன் தரப்பினர் கிராம சபா கூட்டத்தில் புகார் கூறினார். மேலும் ரியல் எஸ்டேட் அனுமதி ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற சொன்னார்.

    அதை ஊராட்சி தலைவி மறுக்கவே ஊராட்சி அலுவ லகம் முன்பு 2 நாட்களாக பகல், இரவாக காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் அதே ரியல் எஸ்டேட் பகுதியில் சாலை அமைக்க வந்தவர்களிடம், எதிர் தரப்பினர் சாலை அமைக்க எதிர்ப்பு தெரி வித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் உள்ளிட்ட 7 பேர்கள் மீது ஊராட்சி தலைவி புஷ்பா குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

    இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க, இது சம்பந்தமாக முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தை குமாரபாளையம் தாசில்தார் கதிர்வேல் தலைமையில் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் இரு தரப்பினர், இன்ஸ்பெக்டர் ரவி, உள்ளிட்டோர் பங்கேற்ற னர். இரு தரப்பினரின் கருத்துக்களை கேட்ட தாசில்தார், இது குறித்து சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்வதாகவும், அதுவரை யாரும் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் கூறினார். இதனை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

    வேலூர் தோட்டப்பாளையத்தில் நள்ளிரவில் வீடுகளுக்குள் அத்துமீறி புகுந்த வடமாநில வாலிபரை பொதுமக்கள் பிடித்து சுற்றிவளைத்து தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

    வேலூர்:

    வேலூர் தோட்டபாளையம் சோளாபுரி அம்மன் கோவில் பகுதியில் சுமார் 35 வயதுடைய வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தார்.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகம் அடைந்தனர். அவரை பிடித்து யார்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த நபர் சரியாக பதில் கூறவில்லை. அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் சில இரும்பு கம்பி துண்டுகள் இருந்தன. பூட்டிய வீடுகளின் பூட்டை திறக்க இவற்றை பயன்படுத்த வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

    சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிடிபட்ட நபர் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் சென்று வரவே திருட்டு முயற்சியில் ஈடுபடலாம் என்ற சந்தேகத்தின்பேரில் நாங்கள் பிடித்தோம். உடனே போலீசாருக்கும் தகவல் அளித்தோம். ஆனால் உடனடியாக போலீசார் வரவில்லை. அவர்கள் 1 மணி நேரத்திற்கு பின்னர் தான் வந்தனர். பிடிபட்ட நபர் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். நாங்கள் தமிழில் பேசுவது அவனுக்கு புரிகிறது. ஆனால் புரியாதது போல நடிக்கிறார். பல இடங்களில் இதேபோன்று அடி வாங்கி உள்ளதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. ஏற்கனவே வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர்.

    எனவே எங்கள் பகுதியில் போலீசார் இரவு ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்’’ என்றனர்.

    கோவை பீளமேட்டில் மாணவிகளிடம் விடுதி உரிமையாளர் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற வீடியோ காட்சிகள் போலீசாருக்கு கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கோவை:

    கோவை பீளமேட்டில் விடுதி மாணவிகள் 5 பேரை ஓட்டலுக்கு அழைத்து சென்று விருந்து கொடுத்து பெண் வார்டன் பாலியலுக்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட விடுதி உரிமையாளர் ஜெகநாதன் (45) நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். தலைமறைவான பெண் வார்டன் புனிதா(32) கடந்த 1-ந் தேதி கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர்.

    புனிதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    நான் கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்தேன். எனக்கு 2குழந்தைகள் உள்ளனர். ஜெகநாதன் கூறியதால் மாணவிகளை ஓட்டலுக்கு விருந்துக்கு அழைத்து சென்று பீர் வாங்கி கொடுத்தேன். மாணவிகள் மறுத்த போது அவர்களை ஜெகநாதனுடன் செல்போனில் ‘வீடியோ கால்’ பேசி ஜாலியாக இருக்குமாறும், அவ்வாறு செய்தால் வசதியாக இருக்கலாம் என கூறி தவறான பாதைக்கு அழைத்தேன்.

    இதற்கு முன்பு எந்த பெண்ணையும் ஜெக நாதனுடன் பேச வைக்க வில்லை. முதல் முறையாக பேச வைத்த போது சிக்கலாகி விட்டது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டதை அறிந்ததும் நான் தப்பி சென்று உறவினர் வீட்டில் பதுங்கினேன். அப்போது தான் ஜெகநாதன் இறந்தது தெரியவந்தது. அவர் தற்கொலை செய்வார் என எதிர்பார்க்கவில்லை.

    என்னிடம் ரூ.10 ஆயிரம் மட்டுமே இருந்தது. இதை வைத்து அதிக நாட்கள் வெளியூரில் தங்கியிருக்க முடியாது என நினைத்தேன். எனது செல்போன் எண் மூலம் போலீசாரும் தேடுவதால் எப்படியும் மாட்டிக் கொள்வேன் என நினைத்து கோர்ட்டில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புனிதாவின் வாக்கு மூலத்தை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

    போலீஸ் காவல் முடிந்து புனிதா நேற்று மாலை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14-ந் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு கண்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து புனிதா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    பெண்களிடம் விடுதி உரிமையாளர் ஜெகநாதன் அத்துமீறி சில்மி‌ஷத்தில் ஈடுபட முயன்ற காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. இந்த காட்சிகள் ஓட்டலில் எடுக்கப்பட்டதா? அல்லது வேறு எங்காவது வைத்து எடுக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை.

    சம்பவத்தன்று ஓட்டலில் என்ன நடந்தது? மாணவிகளுக்கு விருந்து கொடுத்து ஜெகநாதன் அத்துமீறினாரா? என்பதை கண்டுபிடிக்க ஓட்டல் உரிமையாளரை நேரில் வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெகநாதன் பெண்களிடம் அத்து மீறிய வீடியோ காட்சிகளை வழக்கின் முக்கிய ஆதாரமாக கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    ×