என் மலர்
நீங்கள் தேடியது "IIT examined"
- தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
- போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.
ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ளன.
ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.
கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத்தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.
போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பழனி:
பழனி முருகன் கோவில் மூலவர் சிலை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. இந்த சிலை சேதம் அடைந்ததாக கூறி கடந்த 2003-ம் ஆண்டு புதிய சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கோவில் ஸ்தபதி முத்தையா தலைமையில் சிலை அமைப்புக்குழுவினர் 200 கிலோ தங்கத்தில் ஐம்பொன்னால் புதிய சிலையை வடிவமைத்தனர்.
கடந்த 2004-ம் ஆண்டு இந்த சிலை கோவில் மூலவர் சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒரே சன்னதியில் 2 சிலைகள் வைக்க பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புதிதாக வடிவமைக்கப்பட்ட ஐம்பொன்சிலை அகற்றப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆய்வு செய்து வந்தனர்.
பழனி கோவிலில் புதிதாக செய்யப்பட்ட ஐம்பொன்சிலையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதனால் இந்த சிலை மோசடியில் ஈடுபட்ட ஸ்தபதி முத்தையா, அப்போதைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.
இதனிடையே சிலை மோசடி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. சரியான பாதையில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் அதனை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றியதை பக்தர்கள் எதிர்த்தனர்.
இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் விசாரணக்கு தடையில்லை என உத்தரவிட்டது. இதனையடுத்து மீண்டும் விசாரணையை தொடங்கிய குழுவினர் கடந்த வாரம் 2004-ம் ஆண்டு கோவில் தலைமை அர்ச்சகராக இருந்த சுகிசிவத்தின் மகனிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் கோவில் மேலாளர் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவிலில் உள்ள சிலைகளையும் பார்வையிட்டு அக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
இன்று பழனி கோவிலுக்கு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீண்டும் வருகை தந்தனர். சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் முருகையன் தலைமையிலான குழுவினர் பொன்மாணிக்கவேல் முன்னிலையில் ஐம்பொன் சிலையை ஆய்வு செய்து வருகின்றனனர்.
இதனையடுத்து மேலும் சிலரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள குழுவினர் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை கைது செய்யவும் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் பழனி கோவிலின் சிலை மோசடி வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






