என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வு"

    • தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ளன.

    ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.

    கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத்தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

    போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த மே 26-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது.
    • தேர்வில் 48 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை:

    இந்தியாவின் பொறியியல் படிப்புக்கு புகழ்பெற்ற என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிறுவனங்களில் சேர ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டு கட்டமாக ஜே.இ.இ. தேர்வு நடத்தப்படும்.

    முதல் தேர்வு ஜே.இ.இ. மெயின், இரண்டாம் தேர்வு ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் என அழைக்கப்படுகிறது. முதலில் ஜே.இ.இ.மெயின் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெற்றுவிட்டால் என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி. நிறுவனங்களில் சேர்ந்து படிக்கலாம். ஐ.ஐ.டி. கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்க, ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வையும் முடித்திருக்க வேண்டும்.

    இதற்கிடையே நாடு முழுவதும் கடந்த மே 26-ந்தேதி ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு நடந்தது. இத்தேர்வை 1.80 லட்சம் பேர் எழுதினர்.

    இந்த நிலையில் ஜே.இ.இ. அட்வான்ஸ்ட் தேர்வு முடிவுகளை இன்று தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. தேர்வில் 48 ஆயிரத்து 248 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 7 ஆயிரத்து 964 பேர் பெண்கள் ஆவார்கள். ஐஐடி டெல்லி மண்டலத்தை சேர்ந்த வேத்லஹோட்டி 360 மதிப்பெண்களுக்கு 355 மதிப்பெண்களை பெற்று முதல் இடத்தைப் பிடித்தார். பெண்களில் ஐ.ஐ.டி. மும்பை மண்டலத்தைச் சேர்ந்த துவிஜா தர்மேஷ் குமார் படேல் 360க்கு 322 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து உள்ளார். அவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.

    முதல் 10 இடங்களில் ஆதித்யா (ஐ.ஐ.டி. டெல்லி), போகல்பள்ளி சந்தோஷ் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்), ரிதம் கேடியா (ஐ.ஐ.டி. ரூர்க்கி), புட்டி குஷால் குமார் (ஐஐடி மெட்ராஸ்), ராஜ்தீப் மிஸ்ரா (ஐ.ஐ.டி. மும்பை), கோடூரி தேஜேஸ்வர் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்), துருவி ஹேமந்த் தோஷி (ஐ.ஐ.டி. மும்பை), அல்லடபோனா எஸ்.எஸ்.டி.பி. சித்விக் சுஹாஸ் (ஐ.ஐ.டி. மெட்ராஸ்) ஆகி யோர் உள்ளனர்.

    ×