search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "husband house"

    பல்லடத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் கணவர் வீட்டு முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள அனுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 27). இவர் திவ்யா (24) என்பவரை காதலித்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்தார்.

    காதல் திருமணத்துக்கு ஆனந்த் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் ஏற்றுக் கொண்டனர்.

    திவ்யா பல்லடத்தில் தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். ஆனந்த் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

    இதில் திவ்யாவை வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆனந்த் கூறினார். இதற்கு ஆதரவாக அவரது பெற்றோர் நாகராஜ், விசாலாட்சி ஆகியோர் இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட திவ்யா தனது கணவர் வீட்டு முன்பு தரையில் அமர்ந்து நியாயம் கேட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார், பல்லடம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆகியோர் ஆனந்த் குடும்பத்தினரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்வதாக கூறினர்.

    இதனையடுத்து தர்ணா போராட்டதை கைவிட்ட திவ்யா கணவருடன் வீட்டுக்கு சென்றார்.

    மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை கணவர் வீட்டில் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மார்த்தாண்டம்:

    மார்த்தாண்டத்தை அடுத்த முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரமா (வயது 24). ரமாவுக்கும் கோட்டகம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகேஷ் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு உறவினர்கள் இருவருக்கும் இடையே சமரசம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.

    இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சமீபத்தில் மகேஷ் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார்.

    ஊர் திரும்பிய மகேஷ், மனைவியை சந்திக்க வில்லை. எனவே கணவரை பார்க்க ரமா,நேற்று அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் கணவரின் பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை.

    மேலும் வீட்டில் இருந்த ரமாவின் பொருள்களை கொடுத்து அவரை அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமா, தனது குழந்தையுடன் கணவர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது பற்றி அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரித்தனர்.

    இன்று ரமா, இது பற்றி மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×