என் மலர்
நீங்கள் தேடியது "Houses collapsed"
- கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது.
- வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக கனமழை பெய்தது. இதேபோல கம்பம் சுற்று வட்டார பகுதியிலும் சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக இடைவிடாத மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் புகுந்து பெருக்கெடுத்து ஓடியது. கம்பம் நகராட்சி 26, 27, 28வது வார்டுகளில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் 29வது வார்டு ஆதிசக்தி விநாயகர் கோவில் தெருவுக்குள் சூழ்ந்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிர்த்தனர். மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் இரவு முழுவதும் தூக்கமின்றி வேறு இடங்களுக்கு சென்றனர்.
இன்று அதிகாலை அப்பகுதியில் இருந்த அடுத்தடுத்த 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. அப்போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து சுவர் இடிந்து விழுந்ததால் ரேசன் கார்டு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம் மற்றும் பள்ளி மாணவர்களின் புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்து சேதம் ஆகிவிட்டதாக வேதனையுடன் அவர்கள் தெரிவித்தனர்.
எனவே தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு கம்பம் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வீடுகள் இடிந்த குடும்பத்தினரை பாதுகாப்பாக வேறு இடத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பேரையூர்:
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக லேசான முதல் கனமழை பெய்தது. திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது.
வில்லூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தில் மழை காரணமாக தங்கையா என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்தது. வெளிபுறமாக விழுந்ததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
அதேபோல் அருகில் உள்ள சுந்தரராஜ் என்பவரது வீட்டின் சுவரும் சரிந்தது. இதில் சுந்தரராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆனந்தவள்ளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். #Rain
கேரள மாநிலம் 100 ஆண்டுகளில் சந்திக்காத பெருவெள்ளத்தை தற்போது எதிர்கொண்டுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கும் பேரிடர் ஏற்பட்டுள்ளது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 10 லட்சம்பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்து உள்ளனர். தற்போது கடந்த 2 நாட்களாக கேரளாவில் மழை ஓய்ந்துள்ளது. இதனால் முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். இந்த மழை வெள்ளத்தால் 11 ஆயிரம் வீடுகள் முழுவதுமாக இடிந்து நாசமாகிவிட்டது.

கோழிக்கோடு, மலப்புரம், காசர்கோடு, பத்தனம்திட்டா, கண்ணூர் போன்ற இடங்களில் அதிகளவிலான வீடுகள் இடிந்துள்ளன. கண்ணூர் அருகே குட்டநாடு பகுதியில் ஒரு கிராமமே ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விட்டது. இங்கும் வீடுகள் இருந்த இடமே தெரியாதபடி உள்ளது.
26 லட்சம் வீடுகளில் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. 46 ஆயிரம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இதன் மூலம் 2 லட்சத்து 80 ஆயிரம் விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ரூ.1,100 கோடி வரை விவசாயம் மற்றும் வீடுகள் இடிந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 நாட்களில் மட்டும் 251 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளக்காடாக மாறிய கேரளாவில் ஏராளமான கால்நடைகளும் பலியாகி உள்ளன. தற்போது வெள்ளம் வடிந்துவரும் நிலையில் ஆங்காங்கே கால்நடைகள் செத்து மிதக்கின்றன. ஏராளமான மாடுகள், ஆடுகள் அழுகிய நிலையில் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. இதனால் சுகாதார பணிகளும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மழை வெள்ளம் புகுந்ததால் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க முடியாத நிலை உருவானது. இதனால் அந்த விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை வருகிற 26-ந்தேதி முதல் மீண்டும் திறந்து விமான சேவையை தொடங்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது.
தற்போதையை நிலவரப்படி கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்து வருகிறது. மீனவர்கள் வருகிற 23-ந்தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர். #KeralaRain #KeralaFloods






