என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருமங்கலம் அருகே கனமழை: 2 வீடுகள் இடிந்தன
Byமாலை மலர்9 Oct 2018 5:57 AM GMT (Updated: 9 Oct 2018 5:57 AM GMT)
திருமங்கலம் அருகே கனமழை காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்தன. #Rain
பேரையூர்:
மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக லேசான முதல் கனமழை பெய்தது. திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது.
வில்லூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தில் மழை காரணமாக தங்கையா என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்தது. வெளிபுறமாக விழுந்ததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.
அதேபோல் அருகில் உள்ள சுந்தரராஜ் என்பவரது வீட்டின் சுவரும் சரிந்தது. இதில் சுந்தரராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆனந்தவள்ளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். #Rain
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X