search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thirumangalam heavy rain"

    திருமங்கலம் அருகே கனமழை காரணமாக 2 வீடுகள் இடிந்து விழுந்தன. #Rain

    பேரையூர்:

    மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு சில இடங்களில் பரவலாக லேசான முதல் கனமழை பெய்தது. திருமங்கலம் அருகே உள்ள வில்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது.

    வில்லூர் அருகே உள்ள சித்தூர் கிராமத்தில் மழை காரணமாக தங்கையா என்பவரின் வீட்டுச் சுவர் இடிந்தது. வெளிபுறமாக விழுந்ததால் உயிர்சேதம் ஏற்படவில்லை.

    அதேபோல் அருகில் உள்ள சுந்தரராஜ் என்பவரது வீட்டின் சுவரும் சரிந்தது. இதில் சுந்தரராஜ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    தகவல் அறிந்த கள்ளிக்குடி வட்டாட்சியர் ஆனந்தவள்ளி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று ஆய்வு நடத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். #Rain

    ×