search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gutka confiscated"

    • திருச்சி அருகே விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்
    • மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்

    திருச்சி:

    தமிழகம் முழுவதும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதனை முற்றிலும் தடுத்து நிறுத்துமாறு போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் சிறப்பு பிரிவினர் குட்கா விற்பனை குறித்து அதிரடி ஆய்வு நடத்தி குற்றவாளிகளை கைதும் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வளநாடு கூட்டுறவு சங்கம் அருகே உள்ள ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வளநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    அதன்பேரில் இன்று வளநாடு போலீசார் சென்று சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்த்தபோது மூட்டை, மூட்டையாக குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

    விசாரணையில் பாலன் (வயது 29) என்பவர் குட்கா பொருட்களை பல்வேறு இடங்களில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதோடு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 43 மூட்டையில் உள்ள சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    திருச்சியில் இருந்து வாங்கி வந்ததாக கூறப்படும் நிலையில் இவ்வளவு குட்கா பொருட்கள் எங்கிருந்து வந்தது, எங்கெல்லாம் விற்பனை நடைபெறுகிறது, யார், யாரெல்லாம் இந்த விற்பனையில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கும்மிடிப்பூண்டி அருகே பறக்கும் படை வாகன சோதனையில் வேனில் கடத்திய ரூ. 5 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே புதுவாயலில் உள்ள சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சென்னையில் இருந்து வந்த மினி லோடு வேனை வழிமறித்து அவர்கள் சோதனை நடத்தினர். அந்த வாகனத்தில் தடைசெய்யப் பட்ட குட்கா மற்றும் பாக்கு பொருட்கள் 43 பண்டல்கள் இருப்பது தெரியவந்தது.

    சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து பெரியபாளையம் அடுத்த ஆரணிக்கு கொண்டு செல்லப்பட்ட இந்த குட்கா பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 5 லட்சம் ஆகும்.

    பிடிபட்ட மினி லோடு வேனுடன் கூடிய தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் மேற்பார்வையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சென்னை புது வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த டிரைவர் கேசவன் (வயது45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரக்கோணம் அருகே வாடகை வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
    அரக்கோணம்:

    தூத்துக்குடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் லட்சுமிகாந்தன் (வயது 27). அரக்கோணத்தில் மளிகை கடை வைத்துள்ளார். தக்கோலம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தார்.

    இதுபற்றி அரக்கோணம் டி.எஸ்.பி. துரைபாண்டியனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது தலைமையில் போலீசார் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர்.

    அப்போது குட்காவை காரில் ஏற்றிக் கொண்டிருந்த ராமச்சந்திரன் (45) என்பவரை மடக்கி பிடித்தனர். அந்த காரில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.

    அங்கு ஏராளமான அட்டை பெட்டிகள், மூட்டைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தன. அங்கிருந்த 2½ டன் குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    தடை செய்யப்பட்ட குட்கா, மற்றும் புகையிலை பொருட்களை லாரி மூலம் பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. இந்த வீட்டை தக்கோலத்தில் மளிகை கடை நடத்தி வரும் காமராஜ் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் குட்கா பதுக்கி வைக்க உதவியாக இருந்தது தெரியவந்தது.

    போலீசார் 3 பேரையும் தக்கோலம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Gutka
    அண்ணாசாலை பகுதியில் வீட்டில் பதுக்கிய ரூ.1 லட்சம் மதிப்புளள குட்கா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.#Gutka

    சென்னை:

    சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அண்ணாசாலை குருசாமி தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது.

    போதை பொருட்களான ஹான்ஸ், ரெமோ, கூல்லிட், சைனி, பான் பராக் உள்ளிட்டவை பாக்கெட்டுகளாக இருந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அப்துல் மாலிக், முகமது அன்வர், குமரேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    குட்கா போதை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள், எந்த பகுதிகளில் விற்பனை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. #Gutka

    ×