search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gurumurthy"

    • கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.
    • வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது.

    சென்னை:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகேயுள்ள கதிராமங்கலம் கிராமத்தை சேர்ந்த 82 வயது முதியவர் குருமூர்த்தி. இவர் பாலிடெக்னிக் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவர் கல்வியின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அதன் காரணமாக இவர் பணியில் இருக்கும்போதே 1964-ம் ஆண்டு முதல் முதல் திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலம் பகுதிநேர அஞ்சல்வழி பட்டயப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்பு, ஆராய்ச்சி படிப்புகள் படித்து வருகிறார்.

    இதுவரை பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி., என 24 பட்டங்களை பெற்றுள்ளார். அதாவது பணி ஓய்வு பெறுவதற்கு முன்பு 12 பட்டயப் படிப்புகளும், பணி ஓய்வுக்கு பிறகு 12 பட்டப்ப டிப்புகளும் முடித்துள்ளார். கல்வி கற்பதற்கு திருமணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை.

    இந்நிலையில் குருமூர்த்தி தனது 25-வது பட்டப்படி ப்பாக எம்.ஏ., போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற படிப்பை படிப்பதற்கு முடிவு செய்தார். அதற்காக மயிலாடுதுறையில் புதிதாக திறக்கப்பட்ட தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் விண்ணப்பித்திருந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து அதற்கான பாடப்புத்தகங்களை பெறுவதற்கு இளைஞரை போல உற்சாகத்துடன் அவர் வந்தார். அவரை பல்கலைக்கழக துணைவேந்தர் பார்த்தசாரதி பாராட்டி கவுரவித்தார்.

    இதுபற்றி முதியவர் குருமூர்த்தி கூறியதாவது:-

    படிப்பதற்காக நான் செலவு செய்யும் தொகையை செலவாக நினைத்ததே இல்லை. எனது அறிவை வளர்த்து கொள்ளும் விதமாகவே இந்த படிப்புகள் அமைந்துள்ளன. நேரம் தவறாமை மற்றும் திட்டமிடல் ஆகியவை எனது படிப்புக்கு மிகவும் உபயோகமாக இருந்தன. வாட்ஸ் அப், பேஸ்புக்கில் மூழ்கி இன்றைய இளைய தலைமுறையினர் நேரத்தை வீணடித்து வருகின்றனர்.

    வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக கடந்து செல்லவேண்டும். வீணாக்கக்கூடாது. இந்தப் படிப்புகள் என்னை உற்சாக மூட்டி என்றும் இளைஞனாக, மாணவனாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே இளைய தலை முறையினர் கல்வி கற்க அவர்களது நேரத்தை செலவிட வேண்டும். அப்படி பெற்ற கல்வியை மற்றவர்களுக்கும் உதவிட செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல.
    • வர்த்தகத்தால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடு இந்தியா.

    வாரணாசி:

    உத்தர பிரதேசத்தில் நடைபெறும் காசி தமிழ் சங்கமத்தையொட்டி, வாரணாசியில் நடைபெற்ற வர்த்தக இணைப்பு மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பின்னர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

    ஆன்மீகமும், வர்த்தகமும், கலாச்சாரமும், பாரம்பரியமும், வாழ்க்கை முறையும், மொழியும் இணைந்த ஒரு சங்கமம்தான் காசி தமிழ் சங்கமம். தமிழகத்தில் காஞ்சிப்பட்டின் வளர்ச்சியை, காசி பனாரஸ் பட்டில் காண முடிகிறது. இந்தியா ஆன்மீகத்தால் மட்டும் இணைக்கப்பட்ட நாடு அல்ல, வர்த்தகத்தால், பழக்கவழக்கங்களால், போக்குவரத்தால் பிணைக்கப்பட்ட நாடாகும்.

    இந்த தன்மையை மனதில் கொண்டு கங்கை நதிப்புரத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம் என்று பாரதியார் பாடினார். இந்த நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படையாக இருப்பது கங்கை நதி என்று மகாத்மா காந்தி 1909-ல் இந்து ஸ்வராஜ் புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

    மொழிகளும், பழக்க வழக்கங்களும் வேறு வேறாக இருப்பினும், தங்களுக்குள் ஒற்றுமை இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள் என அந்த நூலில் காந்தி கூறியுள்ளார். இதனை தற்போது காசியில் காண முடிகிறது. காசி தமிழ் சங்கமத்தில் அரசியல் இல்லை, ஆன்மீகம் இருக்கிறது.

    தொன்மையான கலாச்சாரத்துடன் நாட்டை காசி இணைத்திருப்பதால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பலரும் காசிக்கு வர வேண்டும் என்று விரும்புவது இயற்கையானது. இந்த விருப்பத்தை நிறைவேற்ற மிக குறுகிய காலத்தில் மிகச்சிறப்பாக காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை திட்டமிட்டு செயல்படுத்திய பிரதமர் மோடி பாராட்டுக்குரியவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நரேந்திர மோடியும், ரஜினியும் இணைந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறினார். #Rajinikanth #Modi #Gurumurthy
    சென்னை:

    இந்திய தொழில் வர்த்தக சபை சம்மேளனங்களின் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ராஷிஸ் ஷா தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. துக்ளக் ஆசிரியரும், ஆடிட்டருமான குருமூர்த்தி கலந்து கொண்டு பேசினார்.

    பின்னர் ஆடிட்டர் குருமூர்த்தி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு சாதகமான முடிவு வரும். இப்போது கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடக்கும் வேளையில் ஏதாவது முடிவு வெளியாகி, அங்கு கலவரம் ஏற்பட்டால் அது தமிழகத்துக்கும் நல்லதல்ல. அதனால்தான் சுப்ரீம் கோர்ட்டும் அதனை புரிந்துகொண்டு மத்திய அரசை கண்டிப்பது போல் கண்டித்து, தேர்தலுக்கு பிறகு தேதியை அறிவித்திருப்பது நல்லது என்றே நினைக்கிறேன். மேலும் இதுபோன்ற நிலையில் எந்த மத்திய அரசும் இதை தள்ளித்தான் போடும்.

    காவிரியில் ஜூன் மாதம்தான் நமக்கு நீர் பகிர்வு திட்டம் தொடங்குகிறது. எனவே இந்த ஆணையம் இந்த தேதிக்கு பிறகு அமைந்தால் ஜூன் மாதத்தில் தண்ணீர் வருவதற்கு தடங்கல் இருக்காது.

    தமிழகத்துக்கு சாதகமான தீர்ப்பு வருவதை தவிர வேறு வழி இல்லை. ஏனென்றால் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட விஷயம். மத்திய அரசு அதில் முத்திரை குத்த முடியுமே தவிர, மாறி சிந்தனை செய்ய முடியாது.

    தமிழக முதல்-அமைச்சரை பிரதமர் பார்த்தால், தொடர்ந்து கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில முதல்-அமைச்சர்களையும் பார்க்க வேண்டும் என்று கூறுவார்கள். அப்படியானால் பிரதமர் வேறு எந்த வேலையையும் பார்க்க முடியாது, இவர்களைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டும்.

    காவிரி ஆணை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்தபோது அதை எதிர்த்து பலர் போராட்டம் நடத்தினார்கள். 15 நாளில் அந்த தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். முதலில் அதற்கு எதிர்ப்பு, பிறகு அதனை அமல்படுத்த வேண்டும் என்றனர். 600 பக்க உத்தரவை எவரும் படிக்கவில்லை. படிக்காமலேயே போராட்டம் நடக்கிறது.

    தமிழக மக்கள் நல்லவர்கள் தான், இப்போது பிரச்சினை செய்து கொண்டு இருப்பவர்கள் அரசியல்வாதிகள் தான். தமிழகத்தில் தலைமைக்கான வெற்றிடம் இருப்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்தால் நிரப்ப முடியும் என்பது எனது கருத்து. அதை மக்கள் ஏற்காமல் இருக்கலாம். ஒரு கட்சிக்கு தலைமை இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் தலைமை இருப்பதை யாரும் ஏற்கவில்லை.

    அதற்கு ரஜினி வந்தால் அவருக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ரஜினிக்கு மக்கள் மீது உள்ள பிடிப்பு, நரேந்திர மோடியின் ஆட்சி திறமை ஆகிய இந்த இரண்டும் சேர்ந்தால் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth #Modi #Gurumurthy
    ×