search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt school student"

    • மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த நாகம்பட்டி போயர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த 11 வயது சிறுவன். இவர் மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    தற்போது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பதால், மதியம் 1 மணிக்கு மேல் பள்ளி செயல்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் அவரது வீட்டில் இருந்து சுமார் 11.50 மணியளவில் கிளம்பி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது சாலையில் நின்றுக்கொண்டிருந்த வெள்ளை நிற காரை கடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அதிலிருந்து வெளியே வந்த அடையாளம் தெரியாத நபர், பேசுவது போல் இந்தியில் பேசியுள்ளார்.

    மொழி புரியாமல் என்ன என்று கேட்டபோது, திடீரென அந்த மாணவனை பிடித்து இழுத்து சென்று உள்ளனர். அதற்குள்ளாக சுதாரித்துக்கொண்ட மாணவன், தன்னை யாரோ கடத்துவதற்கு முயற்சிப்பதை உணர்ந்து, கையிலிருந்த பள்ளி பையை கழட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பித்து அங்கிருந்து ஓடியுள்ளார். இதனை உணர்ந்த சக மாணவர்களும் கையிலிருந்த பையை கீழே போட்டுவிட்டு அனைவரும் ஓடியுள்ளனர்.

    அப்போது அவ்வழியே யாரும் செல்லாததால், அந்த கார் அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றது. பின்னர் மாணவன் பையை எடுத்து கொண்டு உடன் வந்த அனைத்து மாணவர்களையும் அழைத்து கொண்டு, சுமார் 1 கி.மீ. தூரத்தில் உள்ள மத்தூர் போலீஸ் நிலையம் சென்று அங்கு புகார் அளித்துள்ளார்.

    புகாரின் பேரில் மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். அருகே உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து பார்த்தபோது, மாணவன் அடையாளம் கூறிய கார் வேகமாக செல்வது பதிவாகியுள்ளதை வைத்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவனிடம் கேட்டபோது, பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது காரை நிறுத்திவிட்டு வந்த நபர் என்னிடம் பேசுவது போல் பேசிவிட்டு, திடீரென என்னை இழுத்து காரில் போட முயற்சித்தார். நான் அவரிடமிருந்து தப்பித்து ஓடிவிட்டேன். அப்போது ஏற்கனவே காரியில் இரு அரசு பள்ளி மாணவர்கள் இருந்ததை கவனித்தேன். அதில் ஒரு மாணவன் காரிலிருந்து வெளியே கத்திக்கொண்டு வந்தபோது, அவனை தலையில் தாக்கி உள்ளே தூக்கி போட்டனர் என தெரிவித்தான். இந்த சம்பவம் மத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கொடைக்கானலில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையும் தேர்ச்சி விகிதமும் சரிவு

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் 1920ம் ஆண்டில் அரசுப் பள்ளி தொடங்கப்பட்டது. 100 ஆண்டுகளைக் கடந்து தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது. ஆனால் இந்த பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை மிகவும் மந்தமாக உள்ளது.

    பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து இந்த பள்ளியில் படித்தவர்கள் அரசு வேலைகளிலும் தொழிலதிபர்களாகவும் உள்ளனர்.

    ஆனால் தற்போது இங்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில் தான் மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதற்கு பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.பள்ளிக்கு வரும் மாணவ- மாணவிகளுக்கு முறையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி இல்லை என்பதால் மாணவ-மாணவிகள் இங்கு கல்வி பயில வரத்தயங்குவதாக தெரிவிக்கின்றனர்.

    கொடைக்கானல் மலைப்பகுதியில் தனியார் பள்ளியில் குழந்தைகளைப் படிக்க வைக்க வசதியில்லாத பின்தங்கியவர்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இருக்கும் இடத்திற்கு வருவதற்கு மிகுந்த தொலைவு உள்ளதாலும் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நகரின் பல பகுதிகளிலும் குறைவான தொகை பெறும் தனியார் பள்ளிகளும் உள்ளதாலும் அதிக எண்ணிக்கையில் தனியார் பள்ளிகள் உள்ளதாலும் அரசுப் பள்ளியில் சேர மாணவ-மாணவிகளின் பெற்றோர் தயங்குவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் அரசுப் பள்ளியில் கல்வித் தரம் மிகவும் குறைந்துள்ள–தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இங்கு 6 முதல் 12ம் வகுப்பு வரைகல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 303 பேர் மட்டுமே உள்ளனர். மாணவர்கள் 254 பேரும் மாணவிகள் 49 பேரும் பள்ளியில் கல்வி பயின்று வருவதாகக் கூறப்படுகிறது. இவர்களுக்கு கல்வி பயிற்றுக்கொடுக்க 12ஆசிரியைகளும், 7ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர் ஒருவரும் உள்ளனர்.இவ்வளவு ஆசிரியர்கள் இருந்தும் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.

    இந்த வருடம் 10ம் வகுப்பு தேர்வில் 63 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 38 -பேர் இதில் மாணவர்கள் 20 பேர் மாணவிகள் 7 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதேபோல் 12ம் வகுப்புத் தேர்வில் 64 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் 56 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.மாணவர்கள் 33 பேர், மாணவிகள் 3 தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்தி மாணவ மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதில் இங்குள்ள ஆசிரியர்களும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தமிழகத்தில் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்ப–டுவதால் மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ஆனால் கொடைக்கானல் போன்ற மலை கிராமத்தில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது கல்வியாளர்களை வேதனையடைய வைத்துள்ளது.


    கறம்பக்குடியில் அடிப்படை வசதிகள் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. அங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு வகுப்புகளை புறகணித்து பள்ளியின் வளாகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச லேப்டாப், மிதிவண்டி, குடி தண்ணீர் மற்றும் பஸ் பாஸ், பள்ளிக்கு ஆசிரியர் பற்றாக்குறை, சிறு சிறு அடிப்படை வசதிகள் இவைகள் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும்மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கோஷமிட்டனர். பின்னர் பள்ளியின் முன் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் காவல் ஆய்வாளர் கார்த்திக்சாமி சப் இன்ஸ்பெக்டர் பெரிய சாமி, மற்றும் பள்ளி தலைமையாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் மாணவர்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் நடத்தினர்.

    பேச்சு வார்த்தையில் 15 தினங்களுக்குள் கோரிக்கையை நிறைவேற்றி வழங்குவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு வகுப்பிற்கு சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது.
    ×