search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government college student"

    • காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா்.
    • மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

     காங்கயம்:

    கோவையில் இந்தியன் பிட்னஸ் பெடரேஷன் என்ற தனியாா் அமைப்பு சாா்பில் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் காங்கயம் அரசு கலை அறிவியல் கல்லூரி, வணிகவியல் துறை இரண்டாமாண்டு மாணவா் ஜெயராமன் 52 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டாா். இதில் 150 கிலோ எடையை தூக்கி 3ம் இடம் பிடித்தாா். கடந்த வாரம் கோவையில் உள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு 3ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.போட்டியில் வெற்றிபெற்ற மாணவா் ஜெயராமனுக்கு கல்லூரி முதல்வா் நசீம்ஜான், பேராசிரியா்கள், உடற்கல்வி இயக்குநா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

    • விழுப்புரம் அருகே அரசு கல்லூரி மாணவரை கொன்ற வழக்கில் மேலும் 2 பேர் சிக்கினர்.
    • ஆத்திரம் அடைந்த நாங்கள் அருண்குமாரை அடித்து கொைல செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே திருவெண்ணை நல்லூர் போலீஸ் சரகம் டி.எடையார் காலனியை சேர்ந்தவர் முத்துசாமி. அவரது மகன் அருண்குமார். விழுப்புரத்தில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.ஏ.2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல்போனது. எனவே மோட்டார் சைக்கிளை தேடும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அருண்குமாரின் நண்பர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அப்போது அவ ர்கள் அருணை வெளியே அழைத்து சென்றனர். பின்னர் இரவு நேரமாகியும் அருண்குமார் வீட்டுக்கு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். அப்போது நண்பர்களி–டம் விசாரிக்க சென்றபோது அவர்களும் மாயமாகி இருந்தனர். இதற்கிடையில் அருண்குமாரின் இன்னொரு நண்பர் ஒருவர் முத்து சாமியிடம் உங்களது மகனை 4 பேர் அடித்து கொன்று ஏரியில் உள்ள கிணற்றில் வீசியதாக தகவல் தெரிவித்தார். பதறிபோன முனுசாமி தனது மகன் அருண்குமாரை தேடினார்.இந்த நிலையில் அருண்குமார்அதே கிராமத்தில் உள்ள ஏரி கிணற்றில்பிணமாக மிதந்தார்.இதனை பார்த்தமுனுசாம மற்றும் உறவினர்கள்அதி ர்ச்சியடைந்தனர்.

    தகவல் அறிந்த விழுப்புரம் போலீஸ் டி.எஸ்.பி. பார்த்திபன், திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு ஆகி யோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.உடலை கைப்பற்றிவிசாரணை நடத்தினர். விசாரணையில் அருண்குமார் அடித்து கொ லை செய்யப்பட்டி–ருப்பது தெரியவந்தது. எனினும் கொலையா ளிகளை கைது செய்யக்கோரி உறவி–னர்கள் எடையார் பஸ் நிறுத்தம் பகுதியில் கடலூர்-–திருக்கோவிலூர் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்த போலீசார் விசார–ணை–யை முடுக்கினர். இதன்பேரில் அருண்கு–மாரை கொலை செய்ததாக அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் கீர்த்திவர்மன் (17), சத்யன் (16), சரசுராஜ் (17), வீரமணி (18) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் ராேஜஷ் (20), சந்துரு (17) ஆகி யோரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில் அவர்கள் மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு அருண்குமார் வந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அருண்குமாரை அடித்து கொைல செய்ததை ஒப்புக்கொண்டனர். உடனே போலீசார் அவர்களை மத்தியசிறையில் அடைத்தனர். 

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே அரசு கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    வெள்ளக்கோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் முத்தூர் ரோடு அருகே உள்ளது கொங்கு நகர். இந்த பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் லாவண்யா (வயது 20). கங்கயம் அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் லாவண்யா கல்லூரிக்கு சென்றார். கல்லூரி முடிந்து மதியம் 3 மணிக்கு மேல் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாரும் இல்லை. வீட்டின் கதவை தாழ்போட்ட லாவண்யா தனது துப்பாட்டாவில் தூக்குப்போட்டார்.

    சிறிது நேரத்தில் அவர்களது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது லாவண்யா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே லாவண்யாவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

    இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல், ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    மோகனூர்:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட துணைச் செயலாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் கோரிக்கை குறித்து பேசினார்.

    மத்திய, மாநில அரசுகள், அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்க வேண்டும். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க வேண்டும். அரசாணைப்படி அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். மாணவியர், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கமிட்டிகளை அமைத்து, முறையாக கல்வி வளாகங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதே கோரிக்ககைளை வலியுறுத்தி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் சரவணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். #tamilnews
    அடிப்படை வசதிகளை செய்து தர கோரி திருமங்கலம் 4 வழிச்சாலையில் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் 4 வழிச்சாலையோரத்தில் ரூ. 11.36 கோடி மதிப்பீட்டில் அரசு கலைக் கல்லூரியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

    இந்த கல்லூரியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று காலை கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது கல்லூரியில் குடிநீர், கழிப்பறை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். கல்லூரி சரியான நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.

    இதுதொடர்பாக மறியலில் ஈடுபட்ட மாணவிகள் கூறுகையில் கல்லூரி திறக்கப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. கழிப்பறை இருந்தும் அதை பராமரிக்காததால் பயனற்று உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம்.

    மேலும் கல்லூரி தாமதமாக திறக்கப்படுகிறது. பேராசிரியர்கள் தாமதமாக வருகின்றனர். இதனால் எங்கள் கல்வி பாதிக்கப்படுகிறது.

    எனவே இதற்கு உடனே தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தினர். மறியல் குறித்து தகவலறிந்த திருமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது மறியலால் போக்குவரத்து ஒரு மணி நேரம் கடுமையாக பாதிக்கப் பட்டது.

    ×