search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gagandeep Singh"

    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு செய்தார்.
    • புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புயல், மழை பாதிப்புகள் குறித்து இன்று ஆய்வு செய்தார். அப்போது, முதல்வர் கான்வாயில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் ஆகியோர் தொங்கியபடி சென்ற காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

    தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இதையடுத்து, சென்னை காசிமேட்டில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதமடைந்த படகுகளைப் பார்வையிட்டு மீனவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்நிலையில், அங்கு செல்லும்போது சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முதல்வர் கான்வாயில் தொங்கியபடி சென்றனர். இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கோவிலில் முஸ்லிம் வாலிபர் ஒருவரை கொடூரமாக தாக்கிய கும்பலிடமிருந்து போலீஸ் அதிகாரி தைரியமாக காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #GagandeepSingh
    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் ராம்நகர் ஜிரிஜியா கிராமத்தில் உள்ள கோவிலில் முஸ்லிம் வாலிபர் ஒருவர், இந்து பெண்ணிடம் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினைச் சேர்ந்த கும்பல் இளைஞரை தாக்க தொடங்கினர். அதனை தடுக்க முயன்ற பெண்ணிடம், ஒரு இந்து பெண்ணாக இருந்து கொண்டு முஸ்லிம் வாலிபருடன் பழகிக்கொண்டிருக்கிறார் என அந்த கும்பல் கூறியுள்ளது.

    அப்போது கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்கன்தீப் சிங் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் அந்த கும்பலிடம் இருந்து இளைஞரை காப்பாற்றி, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் சிலர் வாலிபரை மீண்டும் தாக்கினார். இதனால் கங்கன்தீப் வாலிபரை கட்டியணைத்து, அவருக்கு பதிலாக அடியை வாங்கிக்கொண்டார். பின்னர் வாலிபரை அங்கிருந்து பத்திரமாக அழைத்துச் சென்றார்.

    இதுகுறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. கும்பலை பார்த்து பயப்படாமல் தைரியமாக வாலிபரை காப்பாற்றிய போலீஸ் அதிகாரிக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன. #GagandeepSingh
    ×