search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Food Item"

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லடம் :

    கரூர் அருகே வேலப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சேர்ந்தவர் பூபதி. இவரது மனைவி ரேஷ்மா என்ற நஸ்ரின்(வயது 30). இவர் தனது 8 வயது மகன் சர்வேஷ், 7 வயது மகன் மித்ரன் மற்றும் தாயார் ஆகியோருடன் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வருவதற்காக கரூரிலிருந்து கோவை செல்லும் அரசு பஸ்சில் பயணித்துள்ளார்.அப்போது பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த அறிமுகமில்லாத பெண்கள் வெயிலுக்கு குடிக்குமாறு ஜூஸ் கொடுத்துள்ளனர்.

    நஸ்ரின் ஜூசை குடிக்காமல் தனது 2 குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். பஸ் பல்லடம் அருகே வந்த போது ஜூஸ்சை குடித்த சர்வேஷ் மற்றும் மித்ரன் ஆகிய இரண்டு குழந்தைகளும் மயங்கி விழுந்துள்ளனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் தெரிவித்தார். அவர்கள் பல்லடம் பஸ் நிலைய நேரக்காப்பாளர் ராஜாவிடம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் பல்லடம் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தார். இதற்குள் பல்லடம் பஸ் நிலையத்திற்கு அந்த பஸ் வந்தது. அதிலிருந்து சிறுவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஸ்சில் பயணிக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடமிருந்து, அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களையோ, குளிர்பானங்களையோ வாங்கி குடித்தால் என்ன மாதிரியான நிலைமை ஏற்படும் என்பதற்கு இச்சம்பவமே உதாரணம். கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு பெண்கள் கொடுத்த ஜூஸ்சை குடித்து குழந்தைகள் மயக்கமடைந்த சம்பவம் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது.
    • அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இன்றைய அவசரமான உலகில் கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். இதனால் வேலை முடிந்து வரும் அவர்கள் வீடுகளில் சமைப்பதற்கு பதில் அதனை ஓட்டல்களில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்டனர்.

    இப்போது ஓட்டல்களுக்கு செல்வதற்கு பதில் அதனை வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து வாங்கும் வசதி வந்துவிட்டது. இதற்காகவே தொடங்கப்பட்ட பல்வேறு தனியார் நிறுவனங்கள் உணவு ஆர்டர் செய்வதற்காக தனி செயலிகளை தொடங்கி அதன்மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவு பொருள்களை சப்ளை செய்து வருகிறார்கள்.

    இந்த செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெரு நகரங்களில் இதுபோன்ற உணவு பொருள் வினியோகிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

    இவ்வாறு வீடுகளுக்கே சென்று உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் உணவு பொருளின் விலையுடன் சேவைக்கட்டணம் மற்றும் வினியோக கட்டணம் ஆகியவற்றையும் சேர்த்து வாங்கி கொள்ளும். அதாவது சென்னையில் ஒரு சிக்கன் பிரியாணியின் விலை ரூ.150 என்றால், அதனை உணவு வினியோக நிறுவனம் மூலம் வாங்கினால் அதற்கு வாடிக்கையாளர் ரூ. 200 செலுத்த வேண்டும்.

    இந்த கூடுதல் கட்டணம் சேவை வரி மற்றும் வினியோக வரி என்ற வகையில் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கூடுதல் கட்டணத்தை உணவு வினியோக நிறுவனத்தினர் தனித்தனியாக பிரித்து காட்டுவதில்லை. மொத்தமாக பில்லில் குறிப்பிட்டு இருப்பார்கள். இதனால் வாடிக்கையாளரிடம் இருந்து எவ்வளவு பணம் கூடுதலாக வாங்கப்படுகிறது என்பது வாடிக்கையாளருக்கு தெரியாது.

    இந்நிலையில் உணவு வினியோக நிறுவனங்கள் இப்போது டெலிவரி கட்டணத்தை ரூ.2 உயர்த்த உள்ளனர். இதுபோல உணவு வினியோக நிறுவனத்தின் உறுப்பினர் கட்டணத்தையும் அதிகரிக்க உள்ளனர். இக்கட்டணங்கள் அதிகரிக்கும் போது இப்போது வாங்கும் விலையை விட உணவு பொருள்களின் விலை 25 சதவீதம் வரை அதிகரிக்கும்.

    அதாவது உணவு வினியோக நிறுவனங்கள் மூலம் வாங்கும் பொருள்களுக்கு தான் இந்த விலை உயர்வு. இதனையே நாம் ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டால் இந்த விலை உயர்வு இருக்காது.

    இதுபோல உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை உறுப்பினர்களாகவும் சேர்த்துள்ளனர். இதற்காக மாதத்திற்கு ஒரு கட்டணமும் வசூலிக்கிறார்கள். உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகைக்கு உணவு வாங்கினால் சலுகை வழங்குவதாக கூறியிருப்பார்கள்.

    அந்த சலுகையை பெற வாடிக்கையாளர் தனது தேவைக்கு அதிகமான உணவை ஆர்டர் செய்ய வே ண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

    இவ்வாறு உணவு வினியோகிக்கும் நிறுவனங்கள் கட்டண உயர்வு மூலம் கூடுதல் பணம் வசூலிப்பதாகவும், இதனை வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பதில்லை என்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. எனவே அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உணவு வினியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இந்த நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களுக்கான விலையை முறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

    ×