search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "female priest"

    • 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.
    • 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.

    சென்னை:

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, பழனி, திருச்செந்தூர், மதுரை, ஸ்ரீரங்கம், சென்னை ஆகிய இடங்களில் தலா ஒரு பயிற்சி பள்ளி நடத்தப்படுகிறது.

    இந்த பள்ளிகளில் சேருபவர்களுக்கு ஒரு ஆண்டு ஆகமம், பூஜை உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

    அந்த வகையில் இந்த ஆண்டு 94 பேர் பயிற்சியில் சேர்ந்தனர். அவர்களில் 3 பேர் பெண்கள்.

    முதுகலை பட்டதாரியான ரம்யா, இளங்கலை கணிதவியல் பட்டதாரியான கிருஷ்ணவேணி, இளங்கலை பட்டதாரியான ரஞ்சிதா. இவர்கள் 3 பேரும் ஒரு வருடம் பயிற்சி முடித்து உள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு அமைச்சர் சேகர் பாபு சான்றிதழ் வழங்கினார்.

    கோவில்களில் பாகுபாடு இருக்கக்கூடாது. ஆண்-பெண் பேதம் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த திட்டத்தில் ஆர்வப்படும் பெண்களும் சேர்த்துக் கொள்ளப்படுவதாக அறநிலையத்துறை கூறுகிறது. தற்போது பயிற்சி பெற்றுள்ள 3 பெண்களும் 6 மாத வகுப்பு முடிந்ததும் பஞ்சராத்ர ஆகமத்தின் கீழ் மன்னார்குடி ஜீயரிடம் தீட்சை பெற்றுள்ளார்கள்.

    பயிற்சி முடித்துள்ள 3 பேரும் ஸ்ரீரங்கம் கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி பெறுவார்கள். அதன்பிறகு தேவைப்படும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்படுவார்கள்.

    • கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.
    • அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காக 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வருவார்கள்.

    நிலாம்பூர்,

    கோவை மாவட்டம், அன்னூர் பகுதியில் கருப்புராயன் சுவாமி கோவில் உள்ளது. இங்கு அமாவாசைதோறும் கருப்புராயன், மாசாணி அம்மனுக்கு கறிப்படை சகிதம் சிறப்பு பூஜைகள் செய்து மதுபானம் ஊற்றி, கடந்த 4 தலைமுறையாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    கருப்புராயன் கோவிலில் அமாவாசை பூஜைக்கான அனைத்து நிகழ்வுகளையும் பெண் பூசாரி கலாமணி என்பவர் முன்னின்று நடத்துகிறார். அப்போது கலாமணி மீது கருப்புராயன் இறங்கும் நிகழ்வு ஆச்சரியப்படுத்துவதாக இருக்கும்.

    அதன்பிறகு அந்த பெண்மணி சாட்டை, அரிவாள், பிரம்பு எடுத்து துடும்பு இசைக்கேற்ப சூறாவளி வேகத்தில் கருப்புராயன் ஆட்டம் ஆடுவார். இதனை தொடர்ந்து பூசாரி கலாமணி ஆணிமுள் செருப்பில் நின்று கொண்டு அருள்வாக்கு சொல்கிறார். அதன்பிறகு கருப்பு ராயனுக்கு திருக்கல்யாணம் செய்து வைக்கும் நிகழ்வு நடக்கிறது.

    அன்னூர் கருப்புராயன் கோவில் அமாவாசை அருள்வாக்கு நிகழ்வை பார்ப்பதற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு வருவார்கள். இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கருப்புராயன் கோவிலில் பூசாரி கலாமணி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பூசாரியாக உள்ளார். அமாவாசை நேரத்தில் அருள்வாக்கு கேட்கும் பக்தர்கள் வேண்டியது அனைத்தும் நடக்கும் என்று ஐதீகம் என்று பரவசத்துடன் கூறுகின்றனர்.

    ×