search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fall victim"

    • மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் பத்திரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதவன் (57). சம்வத்தன்றுபரக்களூர் சின்ன மாரியம்மன் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கிய போது எதிர் பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின் தலையில் பலத்த அடி பட்டதால் ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடினார். தகவல் அறிந்த தனியார் ஆம்புலனஸ் குழுவினர் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். இது குறித்து அவரது மனைவி முருகேஸ்வரி தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மற்றொரு மாணவி உயிருடன் மீட்பு
    • இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட் டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மோனிகா (வயது 14). வள்ளுவம்பாக்கம் அரசு உயர் நிலை பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலை யில் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் அதே பகுதியில் வசிக்கும் அவரது தோழியான, குப்பன் என்பவரின் மகள் செல்வராணி (9) என்பவரோடு அருகில் உள்ள ஏரியில் விளையாட சென்றுள்ளார்

    அங்கு விளையாடிகொண் டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருவரும் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில்

    மூழ்கி தத்தளித்து கொண்டி ருந்தனர். இதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டனர்.

    ஆனால் மோனிகா பரிதாப மாக இறந்துவிட்டார். உயி ருக்கு போராடிக்கொண்டி ருந்த செல்வராணி வாலாஜா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல்சிகிச் சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து காவேரிப்பாக் கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர். இந்த சம்பவம் அப்பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கண் தெரியாத நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி புதூர் அடுத்த அனுபவத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 60) இவர் வயது முதிர்ந்து காரணமாக கண்பார்வை இல்லாமல் உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சின்ன பாப்பா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது கண் பார்வை தெரியாத நிலையில் அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இதை அறிந்த இவரது குடும்பத்தினர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து சின்ன பாப்பாவின் மருமகள் மனோன்மணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேங்காய் அறுக்கும் பணியின் போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் வ.உ.சி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் (வயது 42), தென்னை மரம் ஏறும் கூலி தொழிலாளி. இவர்ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே அத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 3 நாட்களாக தென்னை மரம் சீரமைப்பு பணி மற்றும் தேங்காய் அறுக்கும் வேலையை செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இவர் தென்னை மரத்தில் ஏறி தேங்காய் அறுத்துக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியி லேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து செந்திலின் மனைவி சங்கீதா (36) காவேரிப் பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 50), மரம் வெட்டும் கூலி தொழிலாளி.

    இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். இதில் ராஜேந்திரன் பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை அப்பகுதியினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வேலைசெய்து கொண்டிருந்த போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 45), தொழிலாளி.

    இவர் அதேப்பகு தியில் புதிதாக கட்டப்படும் வீட்டு மாடியில் சென்ட்ரிங் வேலைசெய்து கொண்டு இருந்தார்.

    அப்போது நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.

    அவரை சிகிச்சைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராதிகா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×