search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து பலி
    X

    மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து பலி

    • கண் தெரியாத நிலையில் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மூக்கனூர் ஊராட்சி புதூர் அடுத்த அனுபவத்து வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்ன பாப்பா (வயது 60) இவர் வயது முதிர்ந்து காரணமாக கண்பார்வை இல்லாமல் உள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத போது சின்ன பாப்பா வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.

    அப்போது கண் பார்வை தெரியாத நிலையில் அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து இறந்து கிடந்தார். இதை அறிந்த இவரது குடும்பத்தினர் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பொறுப்பு கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றில் கிடந்த மூதாட்டி உடலை மீட்டனர்.

    மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து சின்ன பாப்பாவின் மருமகள் மனோன்மணி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×