search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "enquiry commission"

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெடித்த கலவரம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆணையத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #JallikkattuProtest
    சென்னை:

    தமிழகத்தில் முந்தைய திமுக ஆட்சியில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் ஊழல் நடைபெற்றதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து இருந்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் அமைக்கப்பட்டு இருந்த இந்த விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு விசாரணையில் விசாரணை ஆணையத்தின் செயல்பாடு குறித்து நீதிபதி கடுமையாக கருத்து தெரிவித்து இருந்தார். இதனை கண்டித்து விசாரணை ஆணையத்தின் தலைவர் ரகுபதி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    இந்த வழக்கு விசாரணையில் தமிழகத்தில் நிறுவப்பட்ட பல்வேறு விசாரணை ஆணையங்கள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அதன்படி, ராஜினாமா செய்த நீதிபதி ரகுபதியின் பதவிக்கு புதியதாக யாரை நியமிப்பது என்பது குறித்து வரும் 27-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.



    மேலும், தூத்துக்குடி கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்துக்கு நியாயமான கால அவகாசம் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், ஜல்லிக்கட்டு போராட்டம் வன்முறையாக மாறியது குறித்து விசாரிக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் கால அவகாசம் வழங்கக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. #ChennaiHC #JallikkattuProtest
    ஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஆஜராகினர். #JayalalithaaDeathProbe #ApolloHospitals
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்துக்கு அப்போலோ நிர்வாகம் முறையாக ஒத்துழைக்கவில்லை என சமீபத்தில் ஆணையம் குற்றம்சாட்டி இருந்தது.

    மேலும், முறையாக ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இறந்த நாள் வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜராகி உள்ளனர். இதயநோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆஜராகி உள்ளனர். ஏற்கனவே சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அது எப்போது ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #JayalalithaaDeathProbe #ApolloHospitals
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாக திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். #JayalalithaaDeathProbe
    சென்னை:

    அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மரணத்தில் பல்வேறு சர்ச்சைகள் இன்று வரை நீடித்தவண்ணம் இருக்கின்றன. அவரது மரணம் இயற்கையானது அல்ல என்று எழுந்த புகாரை விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    ஜெயலலிதாவுடன் தொடர்புடைய அனைவரையும் ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. அதன்படி, சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக தன்னிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

    மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட இரவு, சிகிச்சைக்குப் பின் கண்விழித்தபோது, அறைக்கு வெளியே இருந்து கண்ணாடி வழியாக அவரை பார்த்ததாகவும் ஜெயானந்த் தெரிவித்தார். #JayalalithaaDeathProbe
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் முறையான விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டதா? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiFiring
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தினை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தினை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முறையாக விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை விசாரணை ஆணையம் விசாரித்தால் நேர்மையான தீர்ப்பு வழங்கப்படாது எனக்கூறி, விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதா? என்றும், சட்டத்துக்கு உட்பட்டு ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனவும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வரும் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring
    ×