search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephantiasis"

    • 3 வகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது.
    • ரத்தத்தில் யானைக்கால் நோய் ஒட்டுண்ணிப்புழுக்கள் கலந்திருக்கும்.

    உயிருள்ள உடலினுள் வாழ்ந்துகொண்டு அந்த உடலினுள்ளேயே உணவையும் தேடி சாப்பிட்டுக் கொண்டு வாழும் ஒருவகை புழுக்களின் பெயர் `ஒட்டுண்ணிப்புழுக்கள்'. யானைக்கால் நோய் இந்த மாதிரி 3 வகை ஒட்டுண்ணிப் புழுக்களால் உண்டாகிறது. இந்த நோய் பாதித்தவரின் ரத்தத்தில் யானைக்கால் நோய் ஒட்டுண்ணிப்புழுக்கள் கலந்திருக்கும். பாதிக்கப்பட்டவரை கடிக்கும் கொசு இன்னொரு மனிதரை கடிக்கும் போது நோய் கிருமி பாதித்த ரத்தம் மூலம் அவருக்கு இந்த நோய் பரவுகிறது.

    நிணநீர் நாளங்கள் தான் நமது உடலில் சேரும் கழிவு மற்றும் விஷப்பொருட்களை வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. இந்தப் புழு நிணநீர் நாளங்களைப் பாதிக்கச் செய்வதால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு கழிவுப்பொருட்கள் உடலைவிட்டு சரியாக வெளியேற முடியாமல் போய்விடுகிறது. இதனால் நிணநீர் தேங்கி வீக்கமாக மாறிவிடுகிறது. இந்த நோய் யாருக்கு வேண்டுமானாலும் எந்த வயதிலும் வரலாம்.

    இந்நோய் கால்கள், கைகள், பிறப்புறுப்புகள், மார்பகங்கள் போன்றவற்றை வீங்க வைக்கும். நிறையபேருக்கு கால்கள் தான் அதிகமாக வீங்கும். உடல் பாகங்கள் அதிகமாக வீங்கிப்போவ தால் அன்றாட வேலைகளைச் செய்ய, நடக்க சிரமமாகி விடும். கையோ காலோ நிணநீர் சேர்ந்து சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக வீங்கும். பின்பு மடிப்புகள் விழுந்து நீர் நிரம்பிய தோல் மடிப்புகள் தொங்க ஆரம்பித்துவிடும். 'ஊச்சரே ரியா பேங்க்ரப்டி' என்ற பெயருடைய ஒட்டுண்ணி உருளைப் புழு தான் இந்த நிணநீர் அடைப்பை ஏற்படுத்தி கால்களில் வீக்கத்தை உண்டாக்கும்.

    நீண்ட நாட்கள் உங்கள் கால்களில் வற்றாத வீக்கம் இருந்தால் உங்கள் குடும்ப டாக்டரைச் சந்தித்து இது சாதாரண வீக்கமா, யானைக்கால் நோய் வீக்கமா அல்லது வேறு ஏதாவது நோயினால் ஏற்பட்ட வீக்கமா என்று ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஊசி, மருந்து, மாத்திரைகள், எலாஸ்டிக் கட்டு, அறுவை சிகிச்சைகள் போன்றவை இந்த நோய்க்கு தற்காலிக தீர்வைத் தரும்.

    • ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது
    • 88 பேர் பயனடைந்தனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஜோலார்பேட்டை வட்டார மருத் துவமனை இணைந்து தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் முகாம் நடை பெற்றது. ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ராமலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார்.

    ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, பொன்னேரி, குன்னத் தூர், மண்டலவாடி, திரியாலம், உள்ளிட்ட ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட88 நபர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டதுணை இயக்குனர் செந்தில் பராமரிப்பு பெட்டகம் வழங்கி சிறப்பு ரையாற்றினார்.

    சுகாதார ஆய்வாளர்கள் கோபி, புகழேந்தி, தமிழ்வாணன், சுந்தரபாண்டியன் மற்றும் சுகாதார பணியா ளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகிஷ் ணன் நன்றி கூறினார்.

    • வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது
    • வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    வெள்ளகோவில்:

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் வெள்ளகோவில், எல்.கே.சி.நகரில் நடைபெற்றது.

    வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். டி.ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் ஆர்.மோகன் குமார் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வெள்ளகோவில். எல்.கே.சி.நகர் பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த இரவுநேர மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜேந்திரன், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் அருள்பிரகாஷ்,நிர்மல், கதிரவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

    • வட்டார சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, மோகன்ராஜ், காா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.
    • அப்பகுதியைச் சோ்ந்த 140 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    காங்கயம்:

    யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான ரத்தப் பரிசோதனை முகாம் காங்கயத்தில் நடைபெற்றது.

    காங்கயம் வட்டார மருத்துவ அலுவலா் டாக்டா் முரளி, காங்கயம் நகராட்சி ஆணையா் எஸ்.வெங்கடேஷ்வரன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, காங்கயம் நகரின் 7வது வாா்டுக்கு உட்பட்ட காா்த்திகை நகா், எம்.பி.எம். நகா் ஆகிய பகுதிகளில் யானைக்கால் நோயைக் கண்டறிவதற்கான இரவு நேர ரத்தப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில், அப்பகுதியைச் சோ்ந்த 140 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

    இந்த மருத்துவ முகாமில் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பழனிசாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வட்டார சுகாதார ஆய்வாளா்கள் ரகுபதி, மணி, மோகன்ராஜ், காா்த்தி, ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

    ×