என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "election booth"
- தேர்தல்களின்போது ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.
- அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக சிரமங்கள் உள்ளன.
ஆறுமுகநேரி:
சமூக ஆர்வலரும், ஆறுமுக நேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செய லாளருமான அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-
சிறப்பு நிலை பேரூ ராட்சியான ஆறுமுக நேரியின் 10-வது மற்றும் 17-வது வார்டுகளில் நடராஜநகர், பாரதிநகர், அடைக்கலாபுரம் சாலை, காமராஜபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன.
தேர்தல்களின்போது இப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்ப தற்காக வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடத்துவிளை சந்தன சம நடுநிலைப்பள்ளி, ராஜமன்னியபுரம் பள்ளி மற்றும் முத்து கிருஷ்ணா புரம் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.
அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக சிரமங்கள் உள்ளன. இதன் விளைவாக வாக்குப்பதிவின் சதவீதம் குறைகிறது. ஆகவே இப்பகுதி மக்களின் சிரமங்களை தவிர்க்க ஆறுமுக நேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக வாக்குச் சாவடி களை அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் நாட்டின் அனைத்து கட்சியினரும் பிரசாரம், பொதுக்கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துக் கொண்டு உரையாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மேலும் இந்த ஆண்டு தேர்தலில், 1000 ஆண் வாக்காளர்களுக்கு 911 பெண் வாக்காளர்கள் என்ற அளவில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதையடுத்து அனைத்து பெண்களும் தவறாமல் ஓட்டு போட ஊக்கம் அளிக்கும் வகையில், அம்மாநில தேர்தல் ஆணையம், சகி மத்தன் கேந்திராஸ் எனும் திட்டத்தின் கீழ், பெண்கள் மட்டுமே பணிபுரியும் வாக்குச்சாவடிகளை அமைக்க உள்ளது. 48 தொகுதிகளிலும் தலா ஒரு மகளிர் வாக்குச்சாவடி அமைக்கப்படுகிறது. மேலும் இப்பகுதிகளுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெண் வாக்காளர்களை கவரும் வகையில், வாக்குச்சாவடிகளை சுத்தமாக வைத்திருந்து, ரங்கோலி உள்ளிட்ட சில கலை வேலைப்பாடுகளால் அலங்கரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. #WomenWorkersBooths
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்