என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் புதிய வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை
    X

    ஆறுமுகநேரியில் புதிய வாக்குச்சாவடி அமைக்க கோரிக்கை

    • தேர்தல்களின்போது ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது.
    • அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக சிரமங்கள் உள்ளன.

    ஆறுமுகநேரி:

    சமூக ஆர்வலரும், ஆறுமுக நேரி நகர அ.தி.மு.க. முன்னாள் செய லாளருமான அமிர்தராஜ், தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிறப்பு நிலை பேரூ ராட்சியான ஆறுமுக நேரியின் 10-வது மற்றும் 17-வது வார்டுகளில் நடராஜநகர், பாரதிநகர், அடைக்கலாபுரம் சாலை, காமராஜபுரம் ஆகிய பகுதிகள் உள்ளன.

    தேர்தல்களின்போது இப்பகுதியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிப்ப தற்காக வெகு தூரம் செல்ல வேண்டியுள்ளது. இங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மடத்துவிளை சந்தன சம நடுநிலைப்பள்ளி, ராஜமன்னியபுரம் பள்ளி மற்றும் முத்து கிருஷ்ணா புரம் தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் வாக்குச் சாவடிகளுக்கு செல்வதில் மிகுந்த சிரமங்கள் உள்ளன.

    அதிலும் குறிப்பாக முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கூடுதலாக சிரமங்கள் உள்ளன. இதன் விளைவாக வாக்குப்பதிவின் சதவீதம் குறைகிறது. ஆகவே இப்பகுதி மக்களின் சிரமங்களை தவிர்க்க ஆறுமுக நேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக வாக்குச் சாவடி களை அமைக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×