search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "egg procurement"

    சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. #HighCourt #EggProcurement
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே முட்டை கொள்முதல் அரசாணைக்கு ஐகோர்ட் கடந்த 2018ம் ஆண்டு இடைக்கால தடை விதித்தது.



    முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இதை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி மகாதேவன், அரசாணை முறையாக இல்லை. பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாக கூறி ரத்து செய்வதாக அறிவித்தார்.

    இந்நிலையில், சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டரை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு ஐகோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

    இதுதொடர்பாக சமூக நலத்துறை சார்பில் ஐகோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனு மீதான விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #HighCourt #EggProcurement
    தமிழகத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளில் சத்துணவு முட்டை கொள்முதல் டெண்டருக்கான அரசாணை ரத்து செய்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #HighCourt #EggProcurement
    மதுரை:

    தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மதிய உணவுடன் முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவை அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, முட்டை கொள்முதல் அரசாணைக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.

    முட்டை கொள்முதல் அரசாணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.



    இந்நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி மகாதேவன் தமது உத்தரவில், அரசாணை முறையாக இல்லை என்றும், பல்வேறு பாகுபாடுகள் உள்ளதாகவும் கூறி, அதனை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். முட்டை வழங்குவதில் பாதிப்பு இல்லாத வகையில், இதுவரை யார் முட்டை வழங்கி வருகிறார்களோ அவர்களிடம் அதே விலையில் அதே எண்ணிக்கையில் முட்டை வாங்கலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.  #HighCourt #EggProcurement
    சத்துணவுக்கு விதிமுறை களை பின்பற்றியே முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று அமைச்சர் சரோஜா கூறினார்.
    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் சத்துணவுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 43 ஆயிரம் சத்துணவு மையங்களில் 53 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெறுகிறார்கள். 54 ஆயிரத்து 490 அங்கன்வாடி மையங்களில் 17 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள். சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டை, மசாலா முட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு 2013-ல் இருந்து சத்துணவு உண்ணும் மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு தரமான முட்டைகளை வழங்குவது மட்டும் இல்லாமல், முட்டை கொள்முதல் செய்வதில் மாநில அளவில் வெளிப்படையாக ஒரேவிதமான ஏலமுறையே நடைமுறையில் உள்ளது.

    2013-ல் இருந்து எந்த ஒரு புகாரும் இல்லாமல் விதிமுறைகளை பின்பற்றி முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 58 லட்சம் முட்டை ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எந்த ஒரு முறைகேடோ அல்லது புகார்களோ இல்லாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #EggProcurement #MinisterSaroja
    ×