என் மலர்
நீங்கள் தேடியது "District secrataries"
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி.நகரில் இன்று நடைபெற்றது.
- இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும் என்றார்.
சென்னை:
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தி,நகரில் இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
பாராளுமன்ற தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீட்டை திமுக தலைமை பார்த்துக் கொள்ளும். யார் வெற்றி பெறுவார்களோ அவர் தான் வேட்பாளராக இருப்பார். இந்தத் தொகுதிக்கு இவர் தான் வேட்பாளர் என்ற உறுதி எதுவுமில்லை.
நாம் கை காட்டுபவரே பிரதமராக வேண்டும். 40 தொகுதிகளில் வென்றால் மட்டுமே அது சாத்தியம்.
சேலத்தில் அடுத்த மாதம் 17-ம் தேதி நடைபெற உள்ள இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்ட மாநாடாக இருக்க வேண்டும்.
மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இனி எந்த காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை.
தேர்தல் பணிகளை முன்னெடுத்துச் செல்லுங்கள் என தெரிவித்தார்.
- தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை:
சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுகிறது. இந்த விழாவை பிரமாண்டமாக நடத்துவது பற்றி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர் என தமிழகம் முழுவதும் நிர்வாக ரீதியாக 120 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டார்.
தவெகவில் புதிய நிர்வாகிகளுக்கு நியமன கடிதத்துடன் வெள்ளி நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.