search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District Panchayat"

    • பாளை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.
    • கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம நிறைவேற்றப்பட்டது.

    நெல்லை:

    பாளை கே.டி.சி.நகரில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் செல்வ லெட்சுமி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்த வேண்டும் என்றார்.

    கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம நிறைவேற்றப்பட்டது. மேலும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 9 யூனியன்களில் வள்ளியூர், ராதாபுரம், அம்பை ஆகிய 3 யூனியன்களை தவிர மீதம் உள்ள யூனியன்களில் முதல் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 208 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க ரூ.4 கோடியே 16 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், மாவட்டம் முழுவதும் வளர்ச்சி பணிக்காக சுமார் ரூ.6 கோடி ஒதுக்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் கவுன்சிலர்கள் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

    • தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்றது.
    • மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2,56,15,000-க்கு திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் தலைவர் தமிழ்செல்வி போஸ் தலைமையில் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் ருக்மணி முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி துணை த்தலைவர் உதயகிருஷ்ணன் உள்பட அனைத்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    அனைத்து வட்டாரங்க ளிலிருந்தும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் உதவிப்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 115-வது மத்திய நிதிக் குழு மானியத் திட்டத்தின்கீழ் ரூ.2,85,83014-க்கும்மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.2,56,15,000-க்கு திட்டப்பணிகள் தேர்வு செய்யப்பட்டு 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×