search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "direct"

    • கள்ளிப்பட்டியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    டி.என்.பாளையம்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் இவ்வாண்டு பருவத்தி ற்கான நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியின் போது டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், கோபிசெட்டிபாளையம் தாசில்தார் ஆசியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் ஈரோடு மண்டல மேலாளர் வி.சி.முருகேசன், துணை மேலாளர் தரக்கட்டுப்பாடு பி.மனோகரன், டி.என்.பாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன்,

    கள்ளிப்பட்டி நெல் கொள்முதல் அலுவலர் டி.மோகனசுந்தரம், கொண்டையம் பாளையம் ஊராட்சி தலைவர் மரகதம் பாலு, அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பகவதியண்ணன், செயலாளர் முருகேஷ் சஞ்சிவ், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • சோழவந்தான் பேரூராட்சி சார்பில் தினசரி சந்தையில் நேரடி வசூல் செய்யப்படுகிறது.
    • தினசரி காய்கறி சந்தை, கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது.

    சோழவந்தான்

    சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தினசரி காய்கறி வாரச்சந்தை செயல்படுகிறது. இதனை தண்டல் வசூல் செய்ய வெளிநபருக்கு டெண்டர் மூலம் உரிமம் விடப்பட்டது. கடந்த 6-ந்தேயுடன் முடிவுற்ற நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) முதல் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தினசரி காய்கறி சந்தை, கடை வியாபாரிகளிடம் வரி வசூல் செய்யப்படுகிறது.

    இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் முன்னிலையில் சந்தை வியாபாரிகளிடம் இனி வரும் காலத்திற்கு டெண்டர் ஏலம் விடும்வரை நிர்வாகமே நேரடியாக வரி வசூல் செய்யும் என அறிவிக்க படுகிறது என தெரிவித்தார். தற்போது திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள், சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள், குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல், பேரூராட்சி பகுதிகளை சுகாதாரத்துடன் பராமரிப்பு, துப்புரவு பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

    அப்போது சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், கணக்கர் கல்யாணசுந்தரம், கண்ணம்மா, சந்தோஷ், வினோத், அசோக் ஆகியோர் உடனிருந்தனர்.

    ‘சின்ன வீடு’ படத்தின் இரண்டாம் பாகத்தை பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. #Bhagyaraj #Chinnaveedu
    தமிழ் பட உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் பாக்யராஜ். பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். திரைக்கதை எழுதுவதில் திறமையானவர் என்ற பாராட்டுகளை பெற்றவர். அவரது இயக்கத்தில் ‘சித்து பிளஸ்-2’ படம் 2010-ல் வெளிவந்தது. இதில் அவரது மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்து இருந்தார்.



    தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்ன வீடு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளார். சின்ன வீடு படம் 1985-ல் வெளியானது. இந்த படத்தை பாக்யராஜ் இயக்கி கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். ஊர்வசியின் அக்காள் கல்பனா கதாநாயகியாக நடித்து இருந்தார். அனு இன்னொரு நாயகியாக வந்தார்.

    விருப்பம் இல்லாமல் குண்டான பெண்ணை மணந்து தவிக்கும் இளைஞன் இன்னொரு பெண்ணுடன் தொடர்பு வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை இந்த படம் மையப்படுத்தி இருந்தது. சின்ன வீடு படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பாக்யராஜே இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    மற்ற நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. படத்துக்கான திரைக்கதையை தயார் செய்துள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. #Bhagyaraj #Chinnaveedu
    ×