search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Department of Rural Development"

    • மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
    • திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம்:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். பல்லடம் வட்டார தலைவர் காந்திராஜ் வரவேற்றார், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் அறிக்கை தாக்கல் செய்தார். மாவட்ட பொதுக்குழுவை மாநில செயலாளர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 14-ந் தேதி முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில், திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் அனைவரும் கலந்துகொள்வது, திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, உடுமலை, ஊத்துக்குளி, குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை ஏற்படுத்த அரசை கேட்டு கொள்வது.

    திருப்பூர் மாவட்டத்தின் சங்கத் தலைவராக சாந்தியை தேர்வு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பணி ஓய்வு பெற்ற மாவட்ட தலைவர் ஞானசேகரனுக்கு, முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் நினைவு பரிசு வழங்கினார். இதில் மாநிலத் தலைவர் ரமேஷ், மாநில செயலாளர் ராஜசேகர், மாநில துணைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, மாநில மகளிரணி அமைப்பாளர் வித்யா, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட தணிக்கையாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செப்டம்பர் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
    • செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்

    திருச்சி,

    திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரகப் பகுதிகளில் பசுமையையும், தூய்மையையும் உருவாக்குகின்ற வகையில், இந்த மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 20 முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் செயல்படுத்தப்படவுள்ள சிறப்பு சுகாதார முகாமான "நம்ம ஊரு சூப்பரு'' திட்டத்தை செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை அனைத்து அரசு அலுவலகங்கள் பொது இடங்களில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், ஆகஸ்ட் 27-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை திட, திரவ கழிவு மேலாண்மை தொடர்பாக அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    செப்டம்பர் 3-ந்தேதி முதல் செப்டம்பர் 16-ந்தேதி வரை அனைத்து வீடுகளிலும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும், செப்டம்பர் 17-ந்தேதி முதல் செப்டம்பர் 23-ந்தேதி வரை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி தடை செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,

    செப்டம்பர் 24-ந்தேதி முதல் அக்டோபர் 1-ந்தேதி வரை பசுமைக் கிராமம் மற்றும் முழு சுகாதார கிராமமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அனைத்து அரசு அலுவலர்களும் முழு அளவில் இப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும், திருச்சி மாவட்டத்தில் இச்சிறப்பு முகாமினை வெற்றிகரமாக செயல்படுத்திட வேண்டும் எனவும் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே.பிச்சை, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கங்காதாரிணி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சமத்துவபுரம் உள்ளது.
    • நெ.3 குமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக பராமரிப்பு பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அத்தனூர் பேரூராட்சியில் தேசிய நெடுஞ்சாலை அருகே சமத்துவபுரம் உள்ளது. சமத்துவபுரத்தில் உள்ள 100 வீடுகளில் உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் பராமரிப்பு பணிகள் ரூ.87.91 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. இந்த சமத்துவபுரம் வீடுகளின் மேம்பாட்டு பணியை சென்னை ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதேபோல் நெ.3 குமாரபாளையம் ஊராட்சியில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி திட்ட நூலக பராமரிப்பு பணியையும் அவர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேலு, உதவி செயற்பொறியாளர் பார்த்தீபன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், பிரபாகரன், வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக பொறியாளர்கள் பூபதி, கவுரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×