search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Corporation Election"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது.
    • 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68 கண்காணிப்பாளர்கள் கண்காணித்து வருகின்றனர்.

    கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி மாநகராட்சி பாஜக வசம் இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காலை 10 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி 122 வார்டுகளில் முன்னிலையில் உள்ளது. பாஜக 113 வார்டுகளிலும், காங்கிரஸ் 10 வார்டுகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

    • 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
    • கடந்த தேர்தலில் பாஜக டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியிருந்தது.

    டெல்லி மாநகராட்சியில் உள்ள மொத்தம் உள்ள 250 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 8-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது. அதன் முழு விபரம் வருமாறு:

    ஆஜ் தக் செய்தி நிறுவனம்:-

    ஆம் ஆத்மி 149 முதல் 171 இடங்களில் வெற்றி

    பாஜக - 69 முதல் 91 இடங்களில் வெற்றி

    காங்கிரஸ் - 3 முதல் 7 இடங்களில் வெற்றி

    நியூஸ் எக்ஸ் செய்தி நிறுவனம்:-

    ஆம் ஆத்மி - 159 முதல் 175 இடங்களில் வெற்றி

    பாஜக - 70 முதல் 92 இடங்களில் வெற்றி

    காங்கிரஸ் - 4 முதல் 7 இடங்களில் வெற்றி

    டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம்:-

    ஆம் ஆத்மி - 146 முதல் 156 இடங்களில் வெற்றி

    பாஜக - 84 முதல் 94 இடங்களில் வெற்றி

    காங்கிரஸ் - 6 முதல் 10 இடங்களில் வெற்றி

    பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் கருத்துக்கணிப்பு அடிப்படையில் டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என தெரிய வந்துள்ளது.

    • டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
    • மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

    709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.

    இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது. மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்துள்ளது.

    இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்பின்பு, மாலை 4 மணி நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இந்த நிலையில், தேர்தல் நடந்து முடிந்த மாலை 5.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 250 வார்டுகளுக்கும் சேர்ந்து 50% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    • காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது.
    • மதியம் 2 மணிவரை மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர்.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர்.

    இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில், காலை 10.30 மணியளவில் 9 சதவீதமும், மதியம் 12 மணிவரை 18 சதவீதம் அளவுக்கும் வாக்கு பதிவு இருந்தது.

    மதியம் 2 மணிவரை மந்தகதியிலேயே வாக்கு பதிவு நடந்துள்ளது. இதன்படி, மொத்தமுள்ள வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து உள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    இதன்பின்பு, மாலை 4 மணி நிலவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, டெல்லி மாநகராட்சி தேர்தலில் மாலை 4 மணிவரை 45 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

    • டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், மத்திய மந்திரி மீனாட்சி லேகி வாக்களிப்பு.
    • இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 7-ந் தேதி எண்ணப்படுகிறது.

    டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. 709 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,349 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் காலை முதலே வரிசையில் வந்து வாக்களித்தனர். 


    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் சிவில் லைன்ஸில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக கூறினார். வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடும நேர்மையான கட்சிக்கு வாக்களியுங்கள். ஊழல் செய்பவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் தெரிவித்தார். எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் அடுத்த 5 ஆண்டுகளில் டெல்லியை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


    மத்திய மந்திரி மீனாட்சி லேகி, தெற்கு விரிவாக்கம் பகுதி 2ல் உள்ள வாக்குச் சாவடியில் வாக்கை பதிவு செய்தார். பின்னர் பேசிய அவர், தங்களை நேர்மையானவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் இந்த தேர்தலில் மக்களிடம் இருந்து தகுந்த பதிலைப் பெறுவார்கள் என்றார். சிறைக்குள் ஆம் ஆத்மி அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பது உலகிற்கே தெரிந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். 


    இந்நிலையில் சுபாஷ் மொஹல்லா வார்டில் பாஜகவிற்கு ஆதரவான 450 வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இது டெல்லி அரசின் பெரிய சதி என்றும், இது குறித்து புகார் அளித்து, இந்த தேர்தலை ரத்து செய்து மீண்டும் தேர்தல் நடத்த மேல்முறையீடு செய்வோம் என்றும் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார். 


    இதேபோல் வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி குறிப்பிட்டுள்ளார். டல்லுபுராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த அவர், பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்கவில்லை. தமது மனைவி வாக்களித்துள்ளதாகவும், நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் தமது பெயர் இல்லை என்றும், அதிகாரிகள் சரிபார்த்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


    இதனிடையே மாநகராட்சி தேர்தலில் காலை 10:30 மணி வரை 9 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 13,638 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், துணை ராணுவத்தினர், மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று பதிவாகும் வாக்குகள் வரும்7-ந் தேதி எண்ணப்படுகிறது.

    ×