search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dakshinamara Nadar Sangam college"

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் வரவேற்புரையாற்றினார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ராதாபுரம் உட்கோட்டம் இனைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ். வரவேற்புரை யாற்றினார். முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்நது நெல்லை உதவி கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு அலகு) சசிகலா சாலை விழிப்புணர்வு பற்றியும், சாலை விபத்தை தடுப்பது மற்றும் சாலை விதிகள் பற்றியும் மிகவும் தெளிவாக எடுத்து கூறினார். நிறைவாக நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, நன்றியுரை ஆற்றினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் சேகர், வள்ளியூர் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் முத்து முருகன், நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் லட்சுமி பிரியா, நெல்லை சாலைப் பாதுகாப்பு அலகு உதவிப் பொறியாளர் செல்வன், வள்ளியூர் கோட்ட சாலை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 280-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்நிகழ்வை கல்லூரி அகத் தர மதீப்பட்டு குழு ஒருங்கிணைப்பாளர், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 , 37 மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நட்டனர்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் கல்லூரியில் ஒரு மாணவர் ஒரு மரம் என்ற நோக்கில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. முதல்வர் ராஜன், வரவேற்று பேசினார். நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் மற்றும் கல்லூரி தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார் தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலர் வி.பி.ராமநாதன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக நெல்லை வன பாதுகாவலர் மற்றும் களஇயக்குநர் எ.எஸ். மாரிமுத்து கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் மாணவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தினார். நெல்லை கோட்ட வன அலுவலர் அன்பு சுற்றுச்சூழல் வனம் மற்றும் இயற்கை பாதுகாப்பு பற்றி சிறப்புரை வழங்கினார். நாங்குநேரி வனச்சரக அதிகாரி பலவேச கண்ணன், வனவர்கள், மற்றும் வன அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார். அதைத்ெதாடர்ந்து மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள், அலுவலர்கள் 1,000 மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் நெல்லை தட்சண மாற நாடார் சங்கம் இயக்குநர்கள், கல்லூரிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஹரிகிருஷணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி அகத் தரமதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன், நாட்டு நலப்பணி திட்ட அணி எண். 35 மற்றும் 37 அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், நாட்டு நலப் பணி த்திட்டம் மற்றும் அகத்தர மதிப்பீட்டுக்குழு சார்பில் வளர் இளம் பருவத்தின ருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் ராஜன் முன்னிலை வகி த்தார். ஆர்.பி.எஸ்.கே. மருத்துவ அலுவலர் கடற்கரை குமார் தலைமை யிலான மருத்துவ குழுவி னர் கண், தோல் மற்றும் ரத்த சோகை உள்ளிட்ட பரிசோ தனை களை செய்தனர். ஏராள மான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாமி ற்கான ஏற்பாடுகளை இளஞ்செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் பிருந்தா, கிரிஜா, நாட்டு நலப் பணித்திட்டம் அலுவலர்கள் ராஜராஜேஸ்வரி, ஹரி கிருஷ்ணன், அகத் தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கி ணைப்பாளர் புஷ்ப ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    சுற்றுலா தினம்

    மேலும் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரி வரலாற்று துறை சார்பில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். வரலாற்று துறை தலைவர் பால சரஸ் வதி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ராஜேஷ் கலந்து கொண்டு "மனித வாழ்வில் சுற்றுலாவின் தாக்கம்" என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வரலாற்றுத்துறை தலைவர், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர். மாணவி சுபரிஷா நன்றி கூறினார்.

    • கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார்
    • நடப்பு ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் கூறித்து ராஜ ராஜேஸ்வரி எடுத்துரைத்தார்.

    வள்ளியூர்:

    நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் குறித்த அறிமுக விழா நடைபெற்றது.

    கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு நாட்டு நலப்பணித்திட்டம் தொடர்பான நன்மைகள் குறித்து பேசினார் கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி. காமராஜ், கல்லூரி முதல்வர் ராஜன் ஆகியோர் நாடார் நாட்டு நலப்பணி திட்டத்தின் நோக்கம், மாணவர்களின் பங்கு குறித்து பேசினர்.

    பொருளாதாரத்துறை தலைவர் ராஜேந்திரன் ரவிக்குமார் தனது கடந்த கால அனுபவங்களை மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். நடப்பு ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்டம் கூறித்து ராஜ ராஜேஸ்வரி எடுத்துரைத்தார். தாவரவியல் துறை பேராசிரியர் ஹரி கிருஷ்ணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அணி எண் 35 மற்றும் 37-ஐ சேர்ந்த திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கருத்தரங்கிற்கு கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார்.
    • சிறப்பு விருந்தினராக பேராசிரியர் கண்ணன் நாராயணன் கலந்து கொண்டு பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் தமிழ் துறை சுயநிதிப்பிரிவு, கிராமிய கலை இலக்கிய மன்றம், போதி பன்னாட்டு ஆய்விதழ் சார்பில், 'இலக்கியமும் ஆன்மிக அறிவியலும்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி செயலாளரும், தாளாளருமான வி.பி.ராமநாதன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சவரி ராயம்மாள் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் ராஜன் தொடக்க உரையாற்றினார்.

    கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ், பண்ணை கே.செல்வகுமார், தமிழ் துறை தலைவர்கள் நிர்மலா, கிரிஜா ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஜெர்மனி நாட்டின் கேல் கிறிஸ்டியன் அல்பிரைட் பல்கலைக்கழக பேராசிரியர் கண்ணன் நாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலூர் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் சிங்காரவேலன் முன்னிலையில், ஆய்வு கட்டுரைகளை வாசித்தனர். பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.

    கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன் ஆய்வுக்கோவையை வெளியிட, அதனை பேராசிரியர் கண்ணன் நாராயணன் பெற்று கொண்டார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள், மாணவர்கள் தங்களது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். ஒருங்கிணைப்பாளர் சோனா கிறிஸ்டி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிராமிய கலை இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், பால்மோகன், சித்ரா, கிரேஸ் புஷ்பா ஜூலியட், பீட்டர் ராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

    இதேபோல் கல்லூரியில் யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். அகதர மதிப்பீட்டு குழு துணை ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வரவேற்று பேசினார். யோகா பயிற்சியாளர் ஆனந்த குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு யோகாசன பயிற்சி அளித்தார். சிறப்பான உடல் ஆரோக்கியத்திற்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். பேராசிரியர் ராஜேந்திரன் ரவிக்குமார் நன்றி கூறினார்.

    • கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது.
    • தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

    வள்ளியூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் குமாரகோயில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் கணித விழா-2023 நடைபெற்றது. இதில் பங்கேற்ற தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரி இளங்கலை கணிதவியல் துறை மாணவிகள் வெங்கடேஷ்வரி, தில்லை அருந்ததி, அபிநயா ஆகியோர் வினாடி-வினா போட்டியில் முதலிடம் பிடித்தனர். அவர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    சாதனை படைத்த மாணவிகளை கல்லூரி செயலாளர் வி.பி.ராமநாதன், கல்லூரி முதல்வர் ராஜன், கல்லூரிக்குழு உறுப்பினர் காமராஜ், ஆட்சிக்குழு உறுப்பினர் பண்ணை செல்வகுமார், துறைத்தலைவர் சபீனாரோஸ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.

    ×