என் மலர்
நீங்கள் தேடியது "Cut Off Marks"
- 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன.
- அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும்.
சென்னை:
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அப்போது தான் அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் குறைந்த கட்டணத்தில் சேர முடியும்.
கடந்த சில வருடங்களை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் மாணவர்கள் அதிகளவில் அதிக மதிப்பெண் பெற்ற னர். அகில இந்திய அளவிலான ரேங்க் பட்டியலில் தமிழக மாண வர்கள் 8 பேர் இடம் பெற்றது இதுவே முதல் முறையாகும். 720க்கு 720 மார்க் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 600க்கு மேல் மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகள் 2 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளனர். கடந்த ஆண்டு 1538 பேர் மட்டும் எடுத்து இருந்தனர். அரசு மருத்துவ படிப்புக்கான கட்-ஆப் 650 மதிப்பெண்களுக்கு மேல் இருக்கும் என்று மாணவர் ஆலோசகர் மாணிக்கவேல் ஆறுமுகம் தெரிவித்தார்.
நீட் தேர்வில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் புதிய மருத்துவ கல்லூரி அல்லது தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகளில் இடங்கள் அதிகரிக்கப்படாததால் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு கடினமான சுழல் இந்த வருடம் நிலவக்கூடும்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ள 3 சுயநிதி நிறு வனங்கள் உள்பட 5 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் தேசிய மருத்துவ ஆணையத்தில் நிலுவையில் உள்ளன.
புதிதாக மருத்துவ இடங்கள் அதிகரிக்காததால் கடந்த வரும் இருந்த அதே இடங்களுக்கு அதிகளவில் மதிப்பெண் குவித்தவர்கள் எண்ணிக்கை கூடி உள்ள தால் கட்-ஆப் மதிப் பெண் உயருகிறது. இது மருத்துவ மாணவர் சேர்க்கையில் கடினமான நிலையாக இருக்கும் என்று கல்வியாளர்கள் கருதுகிறார்கள்.
செங்கல்பட்டு, திருச்சி உள்ளிட்ட 9 அரசு மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்ட 150 இடங்களுக்கு பதிலாக 100 இடங்கள் மட்டுமே உள்ளன. கூடுதலாக 400 இடங்கள் கிடைத்து இருந்தால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு கிடைத்து இருக்கும்.
கூடுதலாக இடங்கள் வந்திருந்தால் கட்-ஆப் மதிப்பெண் குறைந்திருக்கும். ஆனால் அதற்கு இந்த ஆண்டு வாய்பப்பு இல்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த வருடம் மருத்துவ இடங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படும் சூழல் உள்ளது.
231 மாணவர்கள் மட்டுமே 1200-க்கு 1180 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 1,171 மாணவ- மாணவிகள் டாப் பட்டியலில் இடம் பெற்றனர்.
1180-க்குமேல் மதிப்பெண் பெற்ற கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்கள் பெரும்பாலும் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடங்களில் 200-க்கு 200 அல்லது 199, 198 மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இந்த வருடம் அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது மேற்குறிப்பிட்ட பாடங்களில் மதிப்பெண் குறைந்திருக்கும் என்பதை தெளிவாக்குகிறது.
இதன் காரணமாக இந்த வருடம் பொறியியல் படிப்புக்கான கட்-ஆப் மார்க் குறையலாம் என்று கல்வியாளர்கள் கூறியுள்ளனர். எனவே அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதால் பொறியியல் கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு உள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்த போதிலும் மாணவர்கள் சொந்தமாகவே பதிவு செய்து வருகிறார்கள். கிராமப்புற மாணவர்கள் எளிதாக பதிவு செய்ய வசதியாக வழிகாட்டுதல் தமிழிலும் கொடுக்கப்பட்டுள்ளன. பிளஸ்-2 தேர்வு முடிவு வெளிவருவதற்கு முன்பே 70 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
நேற்று தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகிறார்கள். 2 நாளில் 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரையில் 90 ஆயிரம் பேர் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும். #Engineering #AnnaUniversity






