search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Councilors protest"

    • நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு தேர்தல்

    முன்னதாக மாநகராட்சி மைய அலுவலக ராஜாஜி கூட்டரங்கில் வரி விதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

    இதற்காக மாநகராட்சி கவுன்சிலர்கள் 55 பேரும் கலந்து கொள்ள வேண்டும் என மாநகராட்சி கமிஷன ரும், தேர்தல் அதிகாரியுமான சிவகிருஷ்ணமூர்த்தி அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு மேல்முறை யீட்டு குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான மனு தாக்கல் நடைபெற்றது.

    வேட்பாளர்கள் அறிவிப்பு

    ஏற்கனவே நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பா ளர் தி.மு.க மைதீன்கான், வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருந்தார்.

    அதன்படி தச்சை மண்ட லத்துக்கு துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கந்தன், கீதா ஆகியோரும், நெல்லை மண்டலத்தில் கவுன்சிலர்கள் உலகநாதன், ராஜேஸ்வரி ஆகியோரும், பாளை மண்டலத்தில் கவுன்சிலர்கள் சுப்புலட்சுமி, பாலம்மாள், மேலப்பாளையம் மண்டலத்தில் கவுன்சிலர்கள் முகைதீன் அப்துல் காதர், ஆமீனா பீவி ஆகியோர் என 9 பேர் வேட்பாளர்களாக அறிவிக் கப்பட்டிருந்தனர்.

    இதனால் போட்டி இருக்காது, அனைத்து கவுன்சிலர்களும் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படு வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    3 பேர் சுயேட்சையாக போட்டி

    இந்நிலையில் திடீர் திருப்பமாக தி.மு.க.வை சேர்ந்த 5-வது வார்டு உறுப்பினர் ஜெகநாதன், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், 42-வது வார்டு உறுப்பினர் பொன் மாணிக்கம் ஆகிய 3 பேரும் சுயேட்சையாக போட்டி யிடுவதாக கூறி மனு தாக்கல் செய்தனர். இதனால் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. மாநகராட்சி யில் 55 கவுன்சிலர்களும் கலந்து கொண்டு தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

    அவர்களுக்காக வழங்கப்பட்ட ஒவ்வொரு வாக்கு சீட்டிலும் 12 கவுன்சிலர்களின் பெயர்கள் இருந்தது. அதில் 9 கவுன்சிலர்களை அவர்கள் தேர்வு செய்து ஓட்டு போட்டியில் போட்டனர்.

    தொடர்ந்து வாக்கு என்னும் பணி நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ உள்பட 6 பேர் வெற்றி பெற்றனர். அதே நேரம் மத்திய மாவட்ட தி.மு.க.வால் அறிவிக்கப்பட்ட கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, பாலம்மாள், ஆமீனாள் பீவி ஆகிய 3 பேரும் தோல்வி அடைந்தனர்.

    அவர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட ஜெகநாதன், ரவீந்தர், பொன் மாணிக்கம் ஆகிய 3 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    கூட்டம்

    இதைத்தொடர்ந்து மாநகராட்சி மைய மண்டபத்தில் கூட்டம் நடந்தது. மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து அவர் டவுன் ஆர்ச்சில் இருந்து குறுக்குத் துறை இணைப்பு சாலைக்கு நெல்லை கண்ணன் சாலை என பெயர் வைக்கப்படு வதாக தீர்மானத்தை வாசித்தார்.

    அப்போது கவுன்சிலர் சங்கர் எழுந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மேலும் பல கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் ஒத்தி வைக்கப்படுவதாக மேயர் சரவணன் அறிவித்தார். தொடர்ந்து கவுன்சிலர்கள் பேச தொடங்கினர்.

    பெண் கவுன்சிலர்கள் போராட்டம்

    அப்போது நெல்லை மண்டல சேர்மன் மகேஸ்வரி பேசும் போது, தனக்கு கொலை மிரட்டல்கள் விடுத்து வருவதாக தெரி வித்தார். அவருக்கு ஆதர வாக கோகுல வாணி உள்ளிட்ட பெண் கவுன்சி லர்கள் கோஷம் எழுப்பினர்.

    தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி மைய மண்ட பத்தின் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

    அப்போது கவுன்சிலர்கள் ரவீந்தர், மாரியப்பன் உள்ளிட்ட வர்கள் பேசும் போது, மேயரின் செயல் பாட்டால் தான் தற்போது வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தலில் போட்டி ஏற்பட்டது. இல்லையென்றால் 9 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருப் போம் என கூறி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு கூச்சல்- குழப்பம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கூட்டம் ஒத்தி வைக்கப் படுவதாக தெரிவித்து மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதை கேட்ட கவுன்சி லர்கள் மேயர் கூட்டத்திற்கு வரவேண்டும், அவரிடம் எங்களது வார்டு பகுதிகளின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற வேண்டும் என கூறினர். அதற்கு பதில் அளித்த கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு விட்டது என தெரிவித்தார்.

    • தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • இந்த நிலையில் இதுவரை 3 முறை மட்டுமே பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த நிலையில் இதுவரை 3 முறை மட்டுமே பேரூராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. கடந்த 5 மாதங்களாக மன்ற கூட்டம் நடத்தாமல் நாள் கடத்தி வந்தனர்.

    மேலும் தங்கள் வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராமல் பேரூராட்சி நிர்வாகம் உள்ளதாக ஆத்திரம் அடைந்த கவுன்சிலர்கள், கடந்த 13-ந் தேதி பேரூராட்சி அலுவலகம் முன்பு மன்ற கூட்டம் நடத்த வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆனால் 15-ந் தேதி கூட்டம் நடக்காததால், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கவுன்சிலர்கள், பேரூராட்சி செயல் அலுவலரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து நேற்று 11 மணிக்கு பேரூராட்சி மன்றத்தில் மன்ற கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவி கவிதா தலைமை வகித்தார். பேரூராட்சி செயலாளர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், தங்கள் வார்டு பகுதியில் தேவையான அடிப்படை வசதிகளுக்கு தீர்மானத்தை கொண்டு வரவில்லை எனவும், பேரூராட்சியில் செய்யப்படாத வேலைகளுக்கு போலியாக பில் போடப்பட்டு கவுன்சிலரிடம் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு கையெழுப்பும் பெற திட்டமிட்டு இருந்ததாக கூறி கேள்வி எழுப்பினர்.

    மேலும் பேரூராட்சி செலவினங்களுக்கு பதில் கூறாமல் பேரூராட்சி தலைவி கவிதா கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலகம் முன்பு தலைவி கவிதா மற்றும் அவருடைய கணவர் ராஜா ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • பேரூராட்சி ஊழியர் உங்களை யார் இந்த புத்தகத்தை பார்க்க சொன்னது என கூறி பறித்துச் சென்றார்.
    • இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சியில் தலைவராக பிரதீபா, துணை த்தலைவராக ஆனந்தி ஆகியோர் உள்ளனர்.

    மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அனைவரும் தி.மு.க. உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருடத்தின் கடைசி பேரூராட்சி கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி காலை 11 மணி முதல் கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். ஆனால் 12 மணி வரை தலைவர், துணைத்தலைவர் என யாரும் வரவில்லை. இதனையடுத்து உறுப்பினர்கள் அஜெண்டா புத்தகத்தில் என்ன தீர்மானங்கள் உள்ளது என பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த பேரூராட்சி ஊழியர் உங்களை யார் இந்த புத்தகத்தை பார்க்க சொன்னது என கூறி பறித்துச் சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூட்டம் நடைபெறும் என அறிவித்து விட்டு தலைவர் மற்றும் துணைத்தலைவரே வராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

    பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருந்தபோதும் கவுன்சிலர்கள் சமாதானம் அடையவில்ைல. கூட்டத்தை நடத்துவது குறித்து தனக்கு எந்தவித அதிகாரமும் கிடையாது. தலைவர் மற்றும் துணைத்தலைவரே முடிவு செய்வார்கள்.

    எனவே போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறு தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்க மறுத்து 10 கவுன்சிலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. சேர்மன் மற்றும் துணைத்தலைவரை கண்டித்து அக்கட்சியை சேர்ந்த உறுப்பினர்களே போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ×