என் மலர்
நீங்கள் தேடியது "Computer Engineer"
- விருதுநகரில் கம்யூட்டர் என்ஜினீயர்-வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
- இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகரை சேர்ந்தவர் அனந்த சிவராமன்(வயது27) கம்யூட்டர் என்ஜினீயர். இவரது மனைவி அபிநயா. அனந்த சிவராமன் கடந்த 5 நாட்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்று விட்டு வீட்டுக்கு வந்தார்.
மன சோர்வுடன் இருந்த அவர் வீட்டின் மாடியில் தூங்கச் சென்றார். இந்தநிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுபற்றி அவரது சகோதரர் ஆனந்தராமன் விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்த சிவராமன் தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேல ஆவாரம்பட்டி அழகத்தான் குளம் ரோடு பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 45).
இவர் கடந்த சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது இடது கை செயலற்று போனது. இதனால் அவர் மன விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தென்னைக்கு வைக்கும் குருணை மருந்தை சாப்பிட்டு ரத்த வாந்தி எடுத்துள்ளார்.
உறவினர்கள் அவரை உடனடியாக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முத்துக்குமாரின் மனைவி அழகம்மாள் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அனூப்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.எம்.வி. 2-வது ஸ்டேஜ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அனூப்குமார் (வயது 38). இவரது மனைவி ராக்கி (35). இந்த தம்பதிக்கு 5 வயதில் பிரியங்கா என்ற மகளும், 2 வயதில் பிரியங்க் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. அனூப்குமாரின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அனூப்குமார் கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அனூப்குமாரின் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள். மேலும் 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள, 2 பெண்களை அனூப்குமார் வேலைக்கு வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கார பெண்களிடம், புதுச்சேரிக்கு குடும்பத்துடன் செல்ல இருப்பதாகவும், அதனால் காலையிலேயே வந்து விடும்படி அனூப்குமார் கூறியிருந்தார். அதன்படி, 2 பேரில் ஒருவர் காலையிலேயே வேலைக்கு வந்தார். அவர் வீட்டு கதவை தட்டியும், யாரும் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து, கதவை அந்த பெண் தள்ளியபோது கதவும் திறந்துள்ளது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அனூப்குமார், அவரது மனைவி ராக்கி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்கள். சிறுமி பிரியங்கா, குழந்தை பிரியங்க் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் சதாசிவ நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அனூப்குமார் உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அனூப்குமார் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் தற்கொலை கடிதம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் தன்னுடைய தம்பிக்கு நேற்று முன்தினம் இரவே தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக அனூப்குமார் இ-மெயில் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. அனூப்குமார், அவரது மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






