என் மலர்
நீங்கள் தேடியது "கம்ப்யூட்டர் என்ஜினீயர்"
- மர்ம நபர்கள் எடுத்து சென்ற பணம், நகை, பொருட்கள் குறித்து உடனே விபரம் தெரியவில்லை.
- சி.சி.டி.வி.காமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதாக வீட்டினர் தெரிவித்தனர்
கன்னியாகுமரி :
குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் ஆன்றனி. இவரது மகன் செபாஸ்டின் (வயது 38). சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். செபாஸ்டின் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே காரியாவிளையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி உள்ளார்.
இந்த வீட்டினை செபாஸ்டின் தாயார் சாயின்மேரி (68) தினமும் காலை வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள செபாஸ்டின் மனைவி அனுஸ்ரீயின் தந்தை இறந்துபோனார்.
இவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள செபாஸ்டின் சிங்கப்பூரிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். பின்னர் கொச்சி சென்று மாமானாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு நேற்று காரியாவிளை வந்தார். பின்னர் இரவு மனைவி, 2 குழந்தைகளுடன் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். இன்று காலை தாயார் சாயின் மேரி வழக்கம்போல் காரியவிளை வீட்டை பார்க்க வந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் பின் பக்கம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் மேல் மாடி அறைகளை உடைத்து, பீரோவையும் உடைத்துள்ளனர். மர்ம நபர்கள் எடுத்து சென்ற பணம், நகை, பொருட்கள் குறித்து உடனே விபரம் தெரியவில்லை. சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ள செபாஸ்டினை தொடர்புக்கொண்டால் தான் முழு விபரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சொத்து பத்திரம் ஒன்றையும், சி.சி.டி.வி.காமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதாக வீட்டினர் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அனூப்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.எம்.வி. 2-வது ஸ்டேஜ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அனூப்குமார் (வயது 38). இவரது மனைவி ராக்கி (35). இந்த தம்பதிக்கு 5 வயதில் பிரியங்கா என்ற மகளும், 2 வயதில் பிரியங்க் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. அனூப்குமாரின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
அனூப்குமார் கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அனூப்குமாரின் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள். மேலும் 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள, 2 பெண்களை அனூப்குமார் வேலைக்கு வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கார பெண்களிடம், புதுச்சேரிக்கு குடும்பத்துடன் செல்ல இருப்பதாகவும், அதனால் காலையிலேயே வந்து விடும்படி அனூப்குமார் கூறியிருந்தார். அதன்படி, 2 பேரில் ஒருவர் காலையிலேயே வேலைக்கு வந்தார். அவர் வீட்டு கதவை தட்டியும், யாரும் கதவை திறக்கவில்லை.
இதையடுத்து, கதவை அந்த பெண் தள்ளியபோது கதவும் திறந்துள்ளது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அனூப்குமார், அவரது மனைவி ராக்கி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்கள். சிறுமி பிரியங்கா, குழந்தை பிரியங்க் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் சதாசிவ நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அனூப்குமார் உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.
அப்போது அனூப்குமார் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் தற்கொலை கடிதம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் தன்னுடைய தம்பிக்கு நேற்று முன்தினம் இரவே தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக அனூப்குமார் இ-மெயில் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. அனூப்குமார், அவரது மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






