search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cloth bag"

    • பிளாஸ்டிக்கை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • இதில், ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா் சரபோஜி சந்தையில் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் தொடங்கப்பட்டது.

    மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் அமைக்க ப்பட்ட இந்த எந்திரத்தின் செயல்பாட்டை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    நெகிழி பயன்பாட்டை அகற்றி துணியால் செய்யப்பட்ட மஞ்சள் பையைப் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இந்தத் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 10 நாணயம் செலுத்தி மஞ்சள் பை பெற்றுக் கொள்ளலாம்.

    பொதுமக்கள் பிளாஸ்டிக்கை தவிா்த்து மீண்டும் மஞ்சள் பை அல்லது துணிப் பைகளைப் பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் வழங்கி யும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

    • நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி பகுதிகளில் ஆய்வு செய்தார்.
    • பொது கழிப்பிடத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    உடன்குடி:

    உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் ஆய்வு செய்தார். பேரூராட்சி அலுவலக கட்டிடத்தினை புனரமைப்பு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் உடன்குடிபேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பிடம் மற்றும் பொது கழிப்பிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பேருந்து நிலைய வணிக வளாகங்களில் நெகிழிப்பை உபயோகம் ஆய்வு செய்து பறிமுதல் செய்யப்பட்டதுடன் நெகிழிபை தடுப்பு மற்றும் துணிப்பை பயன்பாடுகளை அதிகரிக்க செய்வது குறித்து அறிவுரை வழங்கினார்.

    பின்னர் திடக்கழிவு மேலாண்மை திடலில் குப்பைத் தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார். தேவையான பராமரிப்பு மற்றும் நவீன மயமாக்குதல் குறித்து அறிவுரை வழங்கினார். அப்போது பேரூராட்சி செயலாளர் பாபு, தலைவர் ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி மற்றும் ஊழியர்கள் உடன் சென்றனர்.

    பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் காகிதப்பைகள், துணிப் பைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிப்பை விலை கூடுதலாகி உள்ளது. #PlasticBan
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜனவரி-1 ந்தேதி முதல் பிளாஸ்டிக் பைகள் பிளாஸ்டிக் தட்டுகள் உள்பட14 வகையான பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது.

    இதனால் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி, விற்பனை முழுவதும் குறைந்தது.

    மளிகை கடைகள், காய்கறி கடைகள், உணவகம் உள்ளிட்ட பல கடைகளில் துணிப்பைகள், காகிதப் பைகளில் பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் துணிப்பை காகிதப் பைகளுக்கு மவுசு அதிகரித்தது.

    காதிதப்பைகளுக்கான தேவை அதிகரிப்பால் கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்ட காகிதப்பைகள் 2 மடங்கு அதிகரிப்பட்டு ரூ.80 ஆக உயர்ந்துள்ளது.

    சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.8 விலையில் காகிதப்பைகளும் ரூ.15 விலையில் துணிப்பைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

    சென்னையில் துணிப்பைகள், காகிதப் பைகள் விற்பனை செய்யும் கடைகளில் பொது மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. துணிப்பைகள், ரூ.20 முதல் ரூ.100 வரையிலான விலையில் பல்வேறு விதமான வகைகளில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதே போல காகிதப்பைகளும் பல்வேறு வடிவங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது.

    இது குறித்து பாரிமுனையில் காகிதப்பை, துணிப்பைகள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

    ஜனவரி-1 ந்தேதி முதல் துணிப்பைகள், காகிதப்பைகளுக்கு ‘மவுசு’ ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் மத்தியில் துணிப்பை, காகிதப்பைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் கடைகளுக்கு மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. காகித, துணிப்பைகள் விற்பனை பல மடங்கு உயர்ந்துள்ளது.

    துணிப்பை, காகிதப் பைகளுக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பால் பல்வேறு வகையான வடிவங்களில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்து வருகிறோம். ரூ.20 முதல், ரூ.100 வரையிலான விலையில் துணிப்பைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதே போல காகிதப்பைகள் ரூ. 5 முதல் ரூ.30 வரையிலான விலையில் பல்வேறு மாடல்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    காகிதப்பைகள், துணிப் பைகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு துணிப்பை விலை கூடுதலாகி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    ×