search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chettinad Public School"

    • காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.
    • இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள மானகிரி, செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் விளை–யாட்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந் திய கிரிக்கெட் வீரர் நடரா–ஜன் கலந்து கொண்டார். சிவகங்கை மாவட்ட விளை–யாட்டு மற்றும் இளை–ஞர் நலன் அலுவலர் ரமேஷ் கண்ணன் கௌரவ விருந்தி–னராக கலந்துகொண்டார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

    விழாவையொட்டி நடை–பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க–ளுக்கு சிறப்பு பரிசினை கிரிக்கெட் வீரர் நடராஜன் வழங்கினார். பெற்றோர்க–ளுக்கான விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது. விழாவில், கிரிக்கெட் வீரர் நடராஜன் பேசுகையில், கடின உழைப்பபை பின்பற் றினால் வாழ்வில் எத்துறை–யிலும் சாதிக்கலாம் என்றும், விளையாட்டு துறையில் சாதிக்க விரும்புபவர்கள் உடல் ஆரோக்கியத்தை கவ–னமாக பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

    மேலும் விளையாட்டு துறைக்கு உடலே மூலதனம், நேரம் தவறாமை, ஒழுக்கம், கடின உழைப்பு இவை மூன்றும் ஒரு மனிதனை உயர்த்தும் செயல்பாடுகள். திறமை இருந்தால் எந்த மூலையில் இருந்தாலும் உலகப்புகழ் பெறலாம் என்பதற்கு நானே ஒரு உதாரணம். வாழ்வில் கஷ் டப்பட்டால் மட்டுமே வெற்றி நிலைக்கும் எனவும் மாணவர்களுக்கு ஆர்வமூட் டூம் வகையில் பேசி–னார்.

    பள்ளியின் சேர்மன் குமரேசன் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசுகையில், புகழ்பெற்றால் சென்ற இடமெல்லாம் சிறப்பு. அப்புகழைப் பெற மாணவர்கள் பெரும் முயற் சியை மேற்கொள்ள வேண் டும் என்றார்.பள்ளியின் துணை சேர்மன் அருண் குமார் பேசும்போது, எந்த துறையில் நீங்கள் வெற்றி அடைந்தாலும் உங்களின் பணிவே உங்களை சமுதா–யத்தில் உயர்த்தும் என்றார். பள்ளியின் முதல்வர் உஷா குமாரி வரவேற்புரை வழங் கினார். துணை முதல்வர் பிரேம சித்ரா நன்றி கூறி–னார். நிகழ்ச்சியில் மாண–வர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலு–வலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை படைத்தது.
    • முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

    காரைக்குடி

    மத்திய அரசு இடை நிலைக்கல்வி வாரியம் நடத்திய சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வில் மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது. 12-ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி செந்தூரி நாயகி சிவக்குமார் 95.3 சதவீத மதிப்பெண்களுடன் பள்ளியில் முதல் இடத்தை பெற்றுள்ளார்.

    மாணவன் தனுஷ்ராஜ் 95 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தையும், மாண வன் ராகுல் ராஜ்யவர்தன் 91.2 சதவீத மதிப்பெண்களு டம் பள்ளி அளவில் 3-ம் இடத்தை பெற்றுள்ளார்.

    10-ம் வகுப்பு தேர்வில் மாணவி ஹர்ஷிதா 97.3 சதவீத மதிப்பெண்களுடன் முதலிடத்தையும், மாணவன் விஜயகுமார், மாணவி ஸ்ரீயா, சிவக்குமார் இரு வரும் 96 சதவீத மதிப்பெண்க ளுடன் 2-ம் இடத்தையும், மாணவன் கார்த்திக் பாலன் 95.5 சதவீத மதிப்பெண்க ளுடன் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    10-ம் வகுப்பு தேர்வில் தமிழில் ஒருவரும், கணிதத்தில் இருவரும், ஆர்ட்டிபீஷியல் இண்டெலி ஜென்ஸ் பாடத்தில் 7 பேர் 100 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    சாதனை மாணவ- மாணவிகளை பள்ளி தாளாளர் குமரேசன், துணை தாளாளர் அருண்குமார், ட்ரஸ்டிகள் சாந்தி குமரேசன், ப்ரீத்தி அருண்குமார், முதல்வர் உஷாகுமாரி, துணை முதல்வர் பிரேமசித்ரா உள்பட ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

        

    • மருத்துவ மாணவர்களை உருவாக்கும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளிகள்.
    • ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி-மானகிரியில் 2010-ம் ஆண்டு துவக்கப்பட்ட செட்டி நாடு பப்ளிக் பள்ளியானது இயற்கையான எழில்மிகு அமைதியான சூழலில் மாணவர் கற்றலுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியம் மிக்க சமூக மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும் பெயரைக் கொண்டு சிறப்பு மிக்க பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

    தனது 10-ம் ஆண்டில் காலடி வைத்து வெற்றிகரமாக அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. காரைக்குடியில் கல்விக்கு பெருமை சேர்த்த வள்ளல் அழகப்பரின் கல்விச்சேவையை மனதில் கொண்டு கற்றவர் போற்றும்படி, கேட்டவர் வியக்கும்படி மிகச்சிறந்த முறையில் சீரிய கல்விப் பணியாற்றி திறம்பட காரைக்குடி, மானகிரியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியை நிர்வகித்து வருகின்றார். ரோட்டேரியன் குமரேசன்.

    பிரம்மாண்ட கட்டமைப்பு வசதியுடன் AC வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் என ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ISO 9001-2015 தரச்சான்று பெற்றுள்ளது. ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

    பள்ளிக்கு வந்து செல்ல அனைத்து இடங்களுக்கும் நவீன AC பேருந்து வசதி உள்ளதால் மாணவர்கள் தங்கள் பயண நேரத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.பள்ளியிலேயே காலையும், மதியமும் அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகிறது. உண்ணும் பழக்க வழக்கங்களும் கற்றுத்தரப்படுகிறது.

    வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவரால் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நிரந்தர செவிலியர் சேவையும் பள்ளியிலேயே தகுந்த முறையில் கொடுக்கப்படுகிறது.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் பலர் NEET தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரி பயின்று வருகின்றனர் என்பது பள்ளியின் சிறப்பம்சமாகும். NEET தேர்வு மையமாகவும் செட்டி நாடு பப்ளிக் பள்ளி திகழ்ந்து வருகிறது.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் International School Award கிடைத்துள்ளது பெருமைக்குரியது. செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு 2022-2025 ஆண்டிற்கான International Dimension School (IDS) சான்றிதழை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மிகுந்த நட்புணர்வுடன் சிறந்த கற்பிக்கும் திறன் மிக்கவர்களையும் இருப்பது இப்பள்ளியின் சிறப்பு. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு நோக்கத்துடன் கல்வி கற்பித்து வருகின்றனர். கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை மாணவ-மாணவிகளை உருவாக்கி வருகிறது செட்டிநாடு பப்ளிக் பள்ளி.

    ×