search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மருத்துவ மாணவர்களை உருவாக்கும்  காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி
    X

    S.P.குமரேசன்

    மருத்துவ மாணவர்களை உருவாக்கும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி

    • மருத்துவ மாணவர்களை உருவாக்கும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளிகள்.
    • ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி-மானகிரியில் 2010-ம் ஆண்டு துவக்கப்பட்ட செட்டி நாடு பப்ளிக் பள்ளியானது இயற்கையான எழில்மிகு அமைதியான சூழலில் மாணவர் கற்றலுக்கு ஏற்ற வகையில் பாரம்பரியம் மிக்க சமூக மக்கள் வாழும் இடத்தைக் குறிக்கும் பெயரைக் கொண்டு சிறப்பு மிக்க பள்ளியாகச் செயல்பட்டு வருகிறது.

    தனது 10-ம் ஆண்டில் காலடி வைத்து வெற்றிகரமாக அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களை உருவாக்கிக் கொண்டி ருக்கிறது. காரைக்குடியில் கல்விக்கு பெருமை சேர்த்த வள்ளல் அழகப்பரின் கல்விச்சேவையை மனதில் கொண்டு கற்றவர் போற்றும்படி, கேட்டவர் வியக்கும்படி மிகச்சிறந்த முறையில் சீரிய கல்விப் பணியாற்றி திறம்பட காரைக்குடி, மானகிரியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியை நிர்வகித்து வருகின்றார். ரோட்டேரியன் குமரேசன்.

    பிரம்மாண்ட கட்டமைப்பு வசதியுடன் AC வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகம் என ஒரு பள்ளிக்குத் தேவையான அனைத்து வசதிகளுடன் ISO 9001-2015 தரச்சான்று பெற்றுள்ளது. ஆண், பெண் இருபாலர்களுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது.

    பள்ளிக்கு வந்து செல்ல அனைத்து இடங்களுக்கும் நவீன AC பேருந்து வசதி உள்ளதால் மாணவர்கள் தங்கள் பயண நேரத்தையும் மிக மகிழ்ச்சியாக அனுபவிக்கின்றனர்.பள்ளியிலேயே காலையும், மதியமும் அறுசுவை உணவு வகைகள் வழங்கப்படுகிறது. உண்ணும் பழக்க வழக்கங்களும் கற்றுத்தரப்படுகிறது.

    வாரந்தோறும் குழந்தைகள் நல மருத்துவரால் மருத்துவ பரிசோதனையும் நடத்தப்படுகிறது. மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு நிரந்தர செவிலியர் சேவையும் பள்ளியிலேயே தகுந்த முறையில் கொடுக்கப்படுகிறது.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் பலர் NEET தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக்கல்லூரி பயின்று வருகின்றனர் என்பது பள்ளியின் சிறப்பம்சமாகும். NEET தேர்வு மையமாகவும் செட்டி நாடு பப்ளிக் பள்ளி திகழ்ந்து வருகிறது.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் International School Award கிடைத்துள்ளது பெருமைக்குரியது. செட்டிநாடு பப்ளிக் பள்ளிக்கு 2022-2025 ஆண்டிற்கான International Dimension School (IDS) சான்றிதழை பிரிட்டிஷ் கவுன்சில் வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மிகுந்த நட்புணர்வுடன் சிறந்த கற்பிக்கும் திறன் மிக்கவர்களையும் இருப்பது இப்பள்ளியின் சிறப்பு. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறன்மிக்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு நோக்கத்துடன் கல்வி கற்பித்து வருகின்றனர். கல்வியிலும், விளையாட்டிலும் சாதனை மாணவ-மாணவிகளை உருவாக்கி வருகிறது செட்டிநாடு பப்ளிக் பள்ளி.

    Next Story
    ×