என் மலர்
நீங்கள் தேடியது "catch fish"
- கடல் சீற்றம் காரணமாக நாகையில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாகப்பட்டினம்:
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராமம் மீனவர்கள் 3 வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராம மீனவர்கள் 3வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர் குறிப்பாக. நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம் வெள்ளபள்ளம் ஆறுகாட்டுதுறை கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள் பைபர் படகுகள், நாட்டுப்படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து ள்ளனர்.
700 க்கும் மேற்பட்ட விசைப்பட குகள் 3 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வில்லை.
பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் பாம்பனில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் படகுகள் துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ராமேசுவரம் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் சாலைகளில் மணல் புழுதியாக பறந்து சென்றதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்தனர். இதேபோல பாம்பன் பகுதியிலும் வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறவாளி காற்று வீசியது.
இந்தநிலையில் பாம்பன் தெற்குவாடி கடற்கரையில் இருந்து நேற்று விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தயாராகி இருந்தனர். ஆனால் மீன் துறை அதிகாரிகள் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதோடு கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் மூலம் எச்சரிக்கை வந்துள்ளதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல டோக்கன் வழங்காமல் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதித்தனர்.
இந்த திடீர் தடை உத்தரவால் 100-க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியான தென்கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தெற்குவாடி துறைமுக பகுதியிலேயே நங்கூரமிட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீன்துறை அதிகாரிகளின் தடை உத்தரவால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் நேற்று சுமார் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை வாய்ப்பை இழந்தனர். இதேபோல மண்டபம் பகுதியிலும் நேற்று மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் தெற்கு துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், 2-வது நாளாக 800-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் துறைமுக பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.