என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bridge collapses"

    • கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாலத்தை அரசு மூடியது.
    • பாலத்தின் 2, 10, 17 மற்றும் 22-வது தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது.

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் கான்பூர்-உன்னாவ் இடையே கங்கை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1874-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.

    சுக்லகஞ்ச் சுற்றுவட்டார மக்கள் கங்கை ஆற்றை கடந்து செல்வதற்கு இந்த பாலத்தையே பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த பாலத்தின் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் அந்த பாலத்தை ஆய்வு செய்து, அது போக்குவரத்துக்கு பயனற்றது என்று தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு அந்த பாலத்தை அரசு மூடியது. அதன் வழியாக போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது.

    150 ஆண்டு பழமை வாய்ந்த அந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதுபற்றி உள்ளூர் மக்கள் சிலர் கூறுகையில், பாலத்தின் 2, 10, 17 மற்றும் 22-வது தூண்களில் ஏற்பட்ட விரிசல் காரணமாக அந்த பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்துவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக போக்குவரத்து நடைபெறாததாலும், சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதாலும் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றனர்.

    இடிந்து விழுந்த பாலத்தை உள்ளூர் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். பலர் அதனை தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

    பாலம் இடிந்து விழுந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பலத்த மழை காரணமாக இன்று காலை மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர்.
    மும்பை:

    மும்பையில் கடந்த சில மாதங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

    நேற்றிரவும் மும்பையில் பல இடங்களில் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது.

    பலத்த மழை காரணமாக மும்பை அந்தேரியில் ரெயில்வே நடைமேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இன்று காலை 7.30 மணிக்கு அந்த பாலம் இடிந்தது.

    பாலத்தின் ஒரு பகுதி ரெயில் தண்டவாளங்கள் மீது விழுந்தது. அந்த சமயத்தில் ரெயில்கள் எதுவும் வராததால் அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது.

    பாலம் இடிந்ததில் அந்த பகுதியில் நின்றவர்களில் 6 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தண்டவாளத்தின் மத்தியில் பாலம் விழுந்ததால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு ஒரு வழித்தடத்தில் ரெயில் சேவை முடங்கியது. இது லட்சக்கணக்கான பயணிகளை தவிக்க வைத்தது.


    இடிந்து விழுந்த கோகலே சாலை பாலம்தான் மேற்கு அந்தேரியையும் கிழக்கு அந்தேரியையும் இணைக்கும் பாலமாக திகழ்ந்தது. பாலம் இடிந்ததால் அந்தேரிகள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலம் வழியாகத் தான் டப்பாவாலாக்கள் உணவு பாத்திரகளை எடுத்து செல்வார்கள். பல்லாயிரக்கணக்கான பணியாளர்களுக்கு அவர்கள் சேவை தான் முக்கியமானதாகும்.

    இணைப்பு பாலம் இடிந்ததால் டப்பாவாலாக்கள் தங்கள் சேவையை இன்று நிறுத்தியுள்ளனர். #MumbaiRain
    பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. #PoKbridgecollapse #Fivestudentskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு என்கிற மாவட்டம் உள்ளது. இங்கு மிகப்பெரிய ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே மரத்தினாலான தொங்கு பாலம் இருந்தது. தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் ஒரே சமயத்தில் அதிகபட்சமாக 4 பேர் மட்டுமே செல்ல முடியும்.

    இதுதொடர்பாக அங்கு எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இதனை பொருட்படுத்தாமல் மரப்பாலத்தில் கூட்டம் கூட்டமாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து 2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

    அப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த மரப்பாலத்தில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர். திடீரென அந்த மரப்பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. இதில் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர். எனினும் 5 மாணவர்களை பிணமாக தான் மீட்க முடிந்தது.

    இந்நிலையில் மேலும் 2 மாணவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இச்சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

    11 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 9 மாணவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்களை மீட்பதற்கான முழு முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.  #PoKbridgecollapse #Fivestudentskilled 
    பாகிஸ்தான் நாட்டின் நீலம் பள்ளத்தாக்கு பகுதியில் ஆற்றின் மீதிருந்த மரப்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். #PoKbridgecollapse #Fivestudentskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் உள்ள லாகூர் மற்றும் பைசலாபாத் நகரங்களை சேர்ந்த இரு தனியார் மருத்துவ கல்லூரி மாணவர்கள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு இன்று சுற்றுலா வந்தனர்.

    அங்குள்ள ஆற்றங்கரையோரம் நின்று செல்பி எடுக்க நினைத்த அவர்கள் ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள சிறிய மரப்பாலத்தின் மீது கும்பலாக நின்று புகைப்படம் எடுத்தனர். பாரம் தாங்காமல் மரப்பாலம் நொறுங்கி ஆற்றில் விழுந்த விபத்தில் சுமார் 25 மாணவர்கள் ஆற்றுச்சுழலில் சிக்கி அடித்து செல்லப்பட்டனர்.

    தகவல் அறிந்து விரைந்துவந்த ராணுவம் மற்றும் மீட்புப்படையினர் தண்ணீருக்குள் குதித்து சிலரை உயிருடனும், 5 மாணவர்களை பிரேதமாகவும் மீட்டனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. #PoKbridgecollapse #Fivestudentskilled 
    ×