search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Booth Committee Consultative Meeting"

    • நாசரேத் பேரூர் தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என கூட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன் பேசினார்.

    நாசரேத்:

    நாசரேத் பேரூர் தி.மு.க. சார்பில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நாசரேத் பேரூர் செயலாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் பாக முகவர்களின் கடமைகளையும், பூத் கமிட்டியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் எனவும், வீடு வீடாக சென்று அவர்கள் உள்ளுரில் இருக்கிறார்களா? அல்லது வெளியூர், வெளிநாடுகளில் இருக்கிறார்களா? 80 வயதுக்கு மேற்பட்ட வர்களா? மாற்றுத் திறனாளிகளா? என்பது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும்.

    மேலும் வாக்காளர்கள் இறந்து விட்டால் அவர்கள் பெயரை நீக்க அதற்குரிய படிவங்களை நிரப்பி உரிய அலுவல ரிடம் கொடுக்க வேண்டும். 1-1-2024 அன்று 18வயது நிரம்பக்கூடியவர்களை புதிதாக வாக்காளர்களாக சேர்க்கவும், விடுபட்ட வாக் காளர்கள், இடம் மாறிய வாக்காளர்கள், சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கான படிவங்கள் பெற்று பூர்த்தி செய்து, அந்த படிவங்களை, அந்த அந்த முகாம்க ளில் பாக முகவர்களும் பூத் கமிட்டியினரும் திறம்பட செய்து உரிய இடத்தில் சேர்க்க வேண்டும், வீடு வீடாக சென்று தி.மு.க. அரசு செய்த சாதனைகளை விளக்கி சொல்ல வேண்டும் என கூட்டத்தில் பேரூர் தி.மு.க. செயலாளர் ஜமீன் சாலமோன் பேசினார்.

    கூட்டத்தில் நகரஅவை தலைவர் கருத்தையா, பாக முகவர்கள் ஞானராஜ், ஜெபசிங், டேவின் சாலமோன், சிலாக்கியமணி, அன்பு தங்கபாண்டியன், சரவணன், ஜீலியட் எபநேசர், சந்திரசேகர், மனோகரன், மாற்கு தர்மகண், ஜேம்ஸ் ரவி, உடையார், எமர்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் உடையார்பட்டியிலுள்ள ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாநகர் மாவட்டத்திற் குட்பட்ட, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை ரோடு, உடையார்பட்டியிலுள்ள ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே, மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×