search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில் நாளை மறுநாள் அ.தி.மு.க. செயல்வீரர்கள்- பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்- மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அறிக்கை
    X

    மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா

    நெல்லையில் நாளை மறுநாள் அ.தி.மு.க. செயல்வீரர்கள்- பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்- மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா அறிக்கை

    • பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் உடையார்பட்டியிலுள்ள ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சியில் தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்ப தாவது:-

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, நெல்லை மாநகர் மாவட்டத்திற் குட்பட்ட, நெல்லை மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை ரோடு, உடையார்பட்டியிலுள்ள ஆர்.கே.வி. திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

    எனவே, மாநகர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×