என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bogi festival"

    • தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
    • தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர்.

    போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி தயாராவதற்கான நாளாகவும் போகி பண்டிகை கருதப்படுகிறது.

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து "பழையன கழிதலும், புதியன புகுதலும்.." என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் நாளை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

    போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடினர்.

    இந்நிலையில் போகி பண்டிகை கொண்டாட்டத்தால் சென்னையில் கடும் புகைமூட்டம் நிலவுகிறது. பழைய பொருட்களை எரித்ததால் எதிரில் வருவோர் தெரியாத அளவுக்கு சென்னையில் புகை காணப்பட்டது.

    காற்றின் தரக்குறியீடு மணலியில் 140, எண்ணூரில் 116, கொடுங்கையூரில் 107, அரும்பாக்கத்தில் 111, வேளச்சேரியில் 76 ஆக பதிவாகி உள்ளது. பெருங்குடியில் 100 ஆகவும், ராயபுரத்தில் 52 ஆகவும் பதிவாகி உள்ளது. தமிழத்தில் அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 196 ஆக பதிவாகி உள்ளது.

    காற்று மாசு அதிகரிப்பால் சாலையில் வாகன ஓட்டிகள், வயதானவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் அவதிக்குள்ளாகினர்.

    • சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது
    • மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது.

    ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், இரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் ஏற்படும் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் மேற்படி பொருட்களால் புகை மண்டலம் ஏற்பட்டு வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர் மற்றும் டியூப் போன்றவற்றை எரிப்பதால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

    இத்தகைய செயல்கள் பொது மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமையால் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த 21 ஆண்டுகளாக போகிப்பண்டிகைக்கு முன் பொதுமக்களிடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றது. இதன் காரணமாக கடந்த வருடங்களில் பழைய ரப்பர் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர், டியூப் போன்றவற்றை எரிப்பது பெரும்பாலும் குறைந்துள்ளது.

    மேலும், போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தின் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க, காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும்.

    இந்த 2026 ஆம் ஆண்டும் சுற்றுச்சூழல் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகரம் மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே, இவ்வருடம் பொதுமக்கள் அனைவரும் பிளாஸ்டிக், டயர், ட்யூப் போன்றவற்றை எரிக்காமல் சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் வகையில் போகிப்பண்டிகையைக் கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
    • குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வலியுறுத்தல்

    ராணிபேட்டை:

    தமிழர் திருநாளான பொங் கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தையநாளை நாம் போகி பண்டிகையாக கொண் டாடுகிறோம். அந்த நாளில் பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற வழக்கிற்கான அடை யாளமாகும். கிழிந்த பாய்கள், துணிகள், தேய்ந்த துடைப் பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.

    பெரும்பாலும் கிராமங் களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழ லுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால் தற்போது போகி தினத்தன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நக ரங்களில் ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட் களை எரிக்கும்போது நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்க ளுக்கு சுவாச நோய்கள், இரு மல், நுரையீரல், கண் மற்றும் மூக்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்ப டுகிறது. புகையினால் காற்று மாசுபட்டு நாம் வசிக்கும் நக ரம் கருப்பு நகரமாக மாறு கிறது. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக் குவரத்து தடை ஏற்படுகிறது. புகையில்லா போகிப்பண்டிகை

    இதுபோன்ற செயல்கள் மூலம் காற்று மாசுபடுகிறது. பழைய மரம், வறட்டி தவிர மற்றவற்றை எரிப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்.

    போகிப்பண்டிகையன்று குப்பைகளை திடக்கழிவுடன் சேர்த்து அப்புறப்படுத்தி பொங்கல் திருநாளை மகிழ்ச் சியுடன் காற்று மாசு இல்லா மல் கொண்டாட அனைவ ரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    புகையில்லா போகிப்பண் டிகை கொண்டாட பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள் ளது. அதன்படி புகையில்லா மல் போகிப்பண்டிகை கொண்டாடவும், தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை ஆங்காங்கே தீயிலிட்டு எரிக்காமல் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவும், அதன் மூல மாக நமது நகரை காற்று மாசு படுவதில் இருந்து பாதுகாத் திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார் 

    • போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை:

    வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை நமது முன்னோர் கொண்டாடி வந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக சென்னை, மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • மதுரையில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான இன்று போகி பண்டிகை அதிகாலை முதல் உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும். அதாவது பழையனவற்றை வெளியேற்றும் நாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். அதன் பிறகு தீயை சுற்றிலும் நின்று சிறுவர்கள் மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையின் ஒரு பகுதியாக 'நிலைப் பொங்கல்' அனுசரி க் கப்பட்டது. அப்போது பெரியவர்கள் வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்தும் அழகுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிலைப்பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வடை, பாயாசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து, மதுரை மாவட்டத்தில் நிலை பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

    ×