search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bogi festival"

    • மதுரையில் இன்று போகி பண்டிகை கொண்டாட்டப்பட்டது.
    • இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, போகி, தைப்பொங்கல், மாட்டு பொங்கல் என்று 3 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் முதல் நாளான இன்று போகி பண்டிகை அதிகாலை முதல் உற்சாகமாக அனுசரிக்கப்பட்டது. போகி பண்டிகை என்பது பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும். அதாவது பழையனவற்றை வெளியேற்றும் நாளாக கருதப்படுகிறது.

    இந்த நாளில் வீட்டில் இருந்த தேவையற்ற பொருட்களை எடுத்து வந்து தெருக்களில் போட்டு தீ வைத்து எரித்தனர். அதன் பிறகு தீயை சுற்றிலும் நின்று சிறுவர்கள் மேளம் கொட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போகி பண்டிகையின் ஒரு பகுதியாக 'நிலைப் பொங்கல்' அனுசரி க் கப்பட்டது. அப்போது பெரியவர்கள் வீட்டின் நிலைகளுக்கு மஞ்சள் பூசி, திலகமிட்டு, கூரையில் வேப்பிலை, கூரைப்பூ, ஆவாரம்பூ சொருகியும், மா இலை தோரணம், தோகையுடன் கூடிய கரும்பு வைத்தும் அழகுபடுத்தினர். இதனைத்தொடர்ந்து தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நிலைப்பொங்கல் வழிபாடு நடத்தப்பட்டது. அடுத்தபடியாக வடை, பாயாசம், சிறுதானியங்கள், போளி, மொச்சை, பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றை இறைவனுக்கு படைத்து, மதுரை மாவட்டத்தில் நிலை பொங்கல் அனுசரிக்கப்பட்டது.

    • போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது.

    சென்னை:

    வீட்டில் உள்ள தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை நமது முன்னோர் கொண்டாடி வந்துள்ளனர்.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழ்நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக சென்னை, மயிலாப்பூரில் போகி கொண்டாடி தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

    • கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள்
    • குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வலியுறுத்தல்

    ராணிபேட்டை:

    தமிழர் திருநாளான பொங் கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தையநாளை நாம் போகி பண்டிகையாக கொண் டாடுகிறோம். அந்த நாளில் பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற வழக்கிற்கான அடை யாளமாகும். கிழிந்த பாய்கள், துணிகள், தேய்ந்த துடைப் பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.

    பெரும்பாலும் கிராமங் களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழ லுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால் தற்போது போகி தினத்தன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நக ரங்களில் ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட் களை எரிக்கும்போது நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்க ளுக்கு சுவாச நோய்கள், இரு மல், நுரையீரல், கண் மற்றும் மூக்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்ப டுகிறது. புகையினால் காற்று மாசுபட்டு நாம் வசிக்கும் நக ரம் கருப்பு நகரமாக மாறு கிறது. நச்சுப்புகை கலந்த பனி மூட்டத்தால் சாலை போக் குவரத்து தடை ஏற்படுகிறது. புகையில்லா போகிப்பண்டிகை

    இதுபோன்ற செயல்கள் மூலம் காற்று மாசுபடுகிறது. பழைய மரம், வறட்டி தவிர மற்றவற்றை எரிப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும்.

    போகிப்பண்டிகையன்று குப்பைகளை திடக்கழிவுடன் சேர்த்து அப்புறப்படுத்தி பொங்கல் திருநாளை மகிழ்ச் சியுடன் காற்று மாசு இல்லா மல் கொண்டாட அனைவ ரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    புகையில்லா போகிப்பண் டிகை கொண்டாட பொது மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள் ளது. அதன்படி புகையில்லா மல் போகிப்பண்டிகை கொண்டாடவும், தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை ஆங்காங்கே தீயிலிட்டு எரிக்காமல் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவும், அதன் மூல மாக நமது நகரை காற்று மாசு படுவதில் இருந்து பாதுகாத் திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார் 

    ×