search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birth"

    • தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
    • ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கொங்கு மெயின் ரோடு கொடிகம்பம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி சித்ரா. கர்ப்பிணியான இவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.ஆம்புலன்ஸ் வந்ததும் கர்ப்பிணி சித்ராவை ஏற்றிக்கொண்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி நோக்கி ஆம்புலன்ஸ் வேகமாக சென்றது.

    வலி அதிகமானதால் அவருக்கு ஆம்புலன்சிலேயே மருத்துவ உதவியாளர் ஈஸ்வரி சிகிச்சை அளித்தார். அப்போது ஓடும் ஆம்புலன்சிலேயே சித்ராவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

    பின்னர் தாய் மற்றும் குழந்தையை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .அங்கு இருவரும் நலமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஆம்புலன்சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். 

    • சாலையின் இரு புறமும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்குள் அமர்ந்தபடி யானை நடவடிக்கைகளை கண்டு செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.
    • கர்ப்பிணி யானை குட்டியை பிரசவித்து அது வனப்பகுதிக்கு பத்திரமாக கொண்டு செல்லும் வரை கரிமுட்டியில் உள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    உடுமலை :

    கேரள மாநிலம் மறையூர் பகுதியில் உள்ளது சின்னார் வனவிலங்கு சரணாலயம். இங்கு காட்டு யானை, புலி, காட்டு மாடு ,காட்டு மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. சின்னார் வனவிலங்கு சரணாலயம் ஆனது உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் பாதையில் உள்ளது. மலைச்சாலையான இந்த வழியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த வழித்தடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை 5 மணியளவில் ஆலம்பட்டி0 சம்பக்காட்டுக்கும் இடையே ஒரு யானை சாலையில் நின்று கொண்டிருந்தது. சாலையை மறித்தபடி காட்டுயானை நிற்பதை கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு யானை வன பகுதிகள் செல்லும் வரை காத்திருப்பது என முடிவு செய்தனர் .இந்நிலையில் அந்த கர்ப்பிணி யானை குட்டியை ஈன்றது. தகவல் அறிந்த வனத்துறையினர் வாகனங்களை அந்த வழியாக இயக்கத் தடை விதித்தனர். காலையில் யானை தனது குட்டியை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்றது.

    அதுவரை சாலையின் இரு புறமும் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனத்திற்குள் அமர்ந்தபடி யானை நடவடிக்கைகளை கண்டு செல்போனில் படம் பிடித்தபடி இருந்தனர்.கர்ப்பிணி யானை குட்டியை பிரசவித்து அது வனப்பகுதிக்கு பத்திரமாக கொண்டு செல்லும் வரை சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் கரிமுட்டியில் உள்ள போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் நெல்லையை சேர்ந்த பெண் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். #EgmoreRailwayStation #Delivery #PregnantWoman
    சென்னை:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் இசக்கி. இவருடைய மனைவி சுவர்ணலதா (வயது 26). நிறைமாத கர்ப்பிணி. கடந்த சில நாட்களுக்கு முன்பு இசக்கி தனது மனைவியுடன் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

    இதையடுத்து, தீபாவளி பண்டிகையையொட்டி நெல்லைக்கு திரும்ப அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த 6-ந்தேதி விசாகப்பட்டினத்தில் இருந்து ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருவரும் புறப்பட்டனர்.

    எக்ஸ்பிரஸ் ரெயில், சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தை நெருங்கி கொண்டிருக்கையில் (இரவு 7.40 மணி) சுவர்ணலதாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவர் வலியால் அலறி துடித்தார். இதனால் அவரது கணவர் செய்வதறியாது திகைத்தார்.

    இதையடுத்து உடன் இருந்த சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மற்றும் ரெயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதுபற்றி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியின் உதவி மையத்துக்கு தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து உதவி மையத்தில் இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தயாராக இருந்தனர். இரவு 7.55 மணிக்கு ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை வந்தடைந்தது.

    இதையடுத்து அங்கு தயாராக இருந்த மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீசார் சுவர்ணலதா இருந்த ரெயில் பெட்டிக்கு விரைந்தனர்.

    குழந்தை பிறக்க சில நொடிகளே இருந்த காரணத்தால், அந்த ரெயில் பெட்டியிலேயே சுவர்ணலதாவுக்கு பிரசவம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. எனவே அந்த ரெயில் பெட்டியில் இருந்த மற்ற பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து கொடுக்கப்பட்ட உடனடி சிகிச்சை காரணமாக சில நிமிடங்களிலேயே சுவர்ணலதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

    குழந்தை பிறந்த தகவல் அறிந்ததும் சக பயணிகள் உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர். பயணிகள் சிலர் தாங்கள் வைத்திருந்த இனிப்புகளை பிறருக்கு வழங்கினர்.

    அதனை தொடர்ந்து தாயையும், சேயையும் மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பத்திரமாக ரெயில் பெட்டியில் இருந்து வெளியே கொண்டு வந்தனர்.

    அப்போது குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் பயணிகள் அனைவரும் இசக்கி-சுவர்ணலதா தம்பதிக்கு தங்களின் வாழ்த்துகளை கூறினர்.

    அப்போது, தனது மனைவியின் பிரசவத்துக்கு உதவிய மருத்துவ ஊழியர்கள் மற்றும் ரெயில் பாதுகாப்பு படையினருக்கு இசக்கி நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

    இதையடுத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் சுவர்ணலதாவை ‘ஸ்டிரெச்சரில்’ வைத்து தூக்கி ரெயில் நிலையத்துக்கு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் தாயும், சேயும் மேல் சிகிச்சைக்காக சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருவரும் நலமாக உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    சுவர்ணலதாவுக்கு பிரசவம் பார்த்ததன் காரணமாக சென்னை எழும்பூரில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு செல்லவேண்டிய ஹவுரா-கன்னியாகுமரி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில், 10 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.  #EgmoreRailwayStation #Delivery #PregnantWoman
    ×