search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness pamphlet"

    • முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்
    • 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    செய்யாறு கோட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் பெரியார் சிலை அருகில் தொடங்கியது. ஊர்வலத்தை கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    உதவி செயற்பொறியாளர்கள் வள்ளிகாந்தன், தெய்வசிகாமணி, பாண்டியராஜன், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மின் சிக்கன வார விழிப்புணர்வு ஊர்வலத்தில் இளநிலை உதவி பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள், ஐடிஐ மாணவர்கள் உள்பட சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பதாகைகள் ஏந்தி மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.

    விழிப்புணர்வு ஊர்வலம் காந்தி சாலை, பஸ் நிலையம் ஆற்காடு சாலை வழியாக செய்யாறு மின்வாரிய அலுவலகத்திடம் நிறைவடைந்தது.

    செய்யாறில் மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம். முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரெயில்வே போலீசார் வழங்கினர்.
    திருவாரூர்:

    திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில்வே போலீசார் துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கினர். நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர். அப்போது ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பான பயணம் குறித்து விழப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதுகுறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் கூறுகையில்,

    பயணிகள் உடைமைகளை பாதுகாப்பாக இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஜன்னல் அருகில் நகைகள் வெளியில் தெரியும்படி அமரக்கூடாது. கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு, இலவச பாதுகாப்பு தொடர்பு எண்ணான 182-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது அடையாளம் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது என்று கூறினார். 
    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதம் குறித்து நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
    நாமக்கல்:

    ஹெல்மெட் அணியாததால் வாகன விபத்துக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் நாமக்கல் மாவட்ட கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில் மற்றும் சுஜாதா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், சபாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மணிக்கூண்டு அருகே தொடங்கிய ஊர்வலம் பரமத்தி ரோடு, கோட்டை ரோடு, சேலம் ரோடு, கடைவீதி உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நாமக்கல் பஸ் நிலையம் வந்தடைந்தது.

    இதில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு ஊர்வலமாக சென்றனர். முன்னதாக ஹெல்மெட் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போக்குவரத்து போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர். அதில் ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விபத்துக்கள் இல்லாமல் வாகனங்கள் ஓட்ட வேண்டிய வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது. 
    கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி பஜாரில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி வழங்கினார்.

    கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியத்தை போலீசார் பல்வேறு வகையில் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி வைத்து அவர்களுக்கு ஹெல்மெட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்முருகன், மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி கலந்து கொண்டு, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அவர் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தார். அப்போது இருசக்கர வாகன பயணத்தின்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிவதாக வாகன ஓட்டிகள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் நேற்று போக்குவரத்துத்துறை மற்றும் போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமை திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இருசக்கர வாகனத்தில் செல்லும் போது வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்து வருபவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணியவேண்டும். சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்திவிட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ, அதிக வேகமாகவோ வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது.

    போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும். 4 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கண்டிப்பாக சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், செல்லதுரை, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் காவேரி, ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    ×