search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Avadi couple murder"

    ஆவடியில் கணவன், மனைவியை கொன்று கொள்ளையடித்து சென்ற ஆந்திர தம்பதி ரெயில் மூலம் தப்பித்து செல்லும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. #AvadiMurder
    திருநின்றவூர்:

    ஆவடி அய்யப்பன் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 65). இவரது மனைவி விலாசினி (58). இருவரும் அரசு அச்சுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். தனியாக பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.

    கடந்த 27-ந்தேதி காலை வீட்டில் உள்ள அறையில் ஜெகதீசனும், அவரது மனைவி விலாசினியும் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

    அவர்கள் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திராவை சேர்ந்த தம்பதி சுரேஷ், அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் தங்களது மகனுடன் தலைமறைவாகி இருந்தனர்.

    ஜெகதீசன் வீட்டில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு ஆந்திர தம்பதி தப்பி ஓடி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    கொலையாளிகளை பிடிக்க அம்பத்தூர் உதவி கமி‌ஷனர் ஈஸ்வரன் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் ஆந்திரா சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலையாளி சுரேஷ் மீது கொலை, கொள்ளை, போலீஸ்காரரை வெட்டிய வழக்கு உள்ளிட்ட 22 வழக்குகள் இருப்பது தெரிந்தது. ஆந்திராவில் தலைமறைவு குற்றவாளியான அவன் அங்கிருந்து சென்னைக்கு குடும்பத்துடன் தப்பி வந்து கிடைத்த வேலை செய்தான்.

    பின்னர் ஜெகதீசன் வீட்டில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து இருக்கிறான். வீட்டில் நகை-பணம் இருப்பதை அறிந்து ஜெகதீசன், விலாசினியை கொன்று தப்பி விட்டான்.

    இதையடுத்து தலைமறைவான ஆந்திர தம்பதி குறித்த புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். இதேபோல் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அவர்களது புகைப்படம் அனுப்பப்பட்டு உள்ளது.

    தனிப்படை போலீசார் ஆந்திராவில் முகாமிட்டு நெல்லூர், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கொலையாளிகள் சுரேஷ்-பூவலட்சுமி ஆகியோர் மகனுடன் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து தப்பி செல்லும் காட்சி வெளியாகி உள்ளது.

    கொலையை அரங்கேற்றிய பின்னர் அவர்கள் ஆவடி ரெயில் நிலையத்தில் இருந்து சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு ரெயிலில் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் அங்கிருந்து ஆந்திராவுக்கு தப்பி சென்று இருக்கிறார்கள்.

    இந்த காட்சி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    இதில் சுரேஷ் மகனை கையில் பிடித்தபடி அழைத்து செல்கிறான். உடன் செல்லும் அவனது மனைவி பூவலட்சுமி பெரிய மூட்டையை தூக்கியபடி செல்கிறார்.

    கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகள் பற்றிய விபரத்தை 94448 03562, 94981 06608 ஆகிய தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று அறிவித்து உள்ளனர். #AvadiMurder
    ஆவடி அருகே கணவன்-மனைவி கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ஆந்திராவை சேர்ந்த சுரேஷ்குமார், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரியவந்து உள்ளது. #AvadiMurder
    ஆவடி:

    ஆவடியை அடுத்த சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜெகதீசன் (வயது 67). இவருடைய 2-வது மனைவி விலாசினி (58). இருவரும் சென்னையில் உள்ள தமிழக அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்த கணவன்-மனைவி இருவரும் கடந்த மாதம் 27-ந் தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். மர்மநபர்கள், இரும்பு குழாயால் இருவரின் தலையிலும் தாக்கி கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இவர்களுக்கு உதவியாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), தனது மனைவி லட்சுமி (22), மகன் சதீஷ் (3) ஆகியோருடன் அங்கேயே தங்கி இருந்தார். கொலை சம்பவத்துக்கு பிறகு சுரேஷ்குமார் குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார்.

    கொலையுண்ட ஜெகதீசன்-விலாசினி

    எனவே அவர்தான் இந்த கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளியை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் பல பரபரப்பான தகவல்களை தனிப்படை போலீசார் வெளியிட்டனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    சுரேஷ்குமாரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் உள்ள வயதான தனது வளர்ப்பு தாயுடன் அவர் அடிக்கடி பேசி இருப்பது தெரிந்தது. இதனால் சுரேஷ்குமார் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பது உறுதியானது. விசாகப்பட்டினம் சென்றுள்ள தனிப்படை போலீசார் அங்கு அவரைப்பற்றி விசாரித்தனர்.

    அதில் சுரேஷ்குமார் மீது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் உள்ளது. 11-07-2017 அன்று ஒரு வழக்கு சம்பந்தமாக விசாகப்பட்டினம் போலீசார், அங்குள்ள கோர்ட்டுக்கு சுரேஷ்குமாரை அழைத்து வரும்போது அவருடன் பாதுகாப்புக்காக சென்ற போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    அன்றில் இருந்து சுரேஷ்குமாரை விசாகப்பட்டினம் போலீசார் தேடி வருகின்றனர். அங்கிருந்து தலைமறைவான சுரேஷ்குமார், சென்னையை அடுத்த ஆவடி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்தார்.

    அதன்பிறகுதான் ஜெகதீசன் வீட்டில் வந்து தங்கினார். அப்போது இருவரும் தனியாக இருப்பதை சாதகமாக்கிக்கொண்டு கணவன்-மனைவியை அடித்துக்கொலை செய்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இவ்வாறு தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக உள்ள சுரேஷ்குமாரின் புகைப்படங்களை தனிப்படை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

    சுரேஷ்குமார் ஆந்திர மாநிலத்தில் தலைமறைவாக உள்ளாரா? அல்லது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பதுங்கி உள்ளாரா? என தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடித்தால்தான், இரட்டை கொலை, கொள்ளைக்கான காரணம் என்ன? எவ்வளவு கொள்ளை போனது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். #AvadiMurder
    ஆவடியில் நகை மற்றும் பணத்துக்காக கணவன், மனைவியை அடித்து கொலை செய்து தப்பிய ஓடிய கொலையாளி தம்பதியை பிடிக்க 3 தனிப்படை ஆந்திராவுக்கு விரைந்துள்ளது. #AvadiMurder
    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த அய்யன் நகர் சேக்காடுமெயின் ரோட்டில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன் (வயது 67). அண்ணா சாலையில் உள்ள அரசு அச்சகத்தில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் முதல் மனைவியை பிரிந்து அரசு அச்சகத்தில் வேலை பார்த்த கணவரை பிரிந்து வாழ்ந்த விலாசினியை (58) 2-வதாக திருமணம் செய்து இருந்தார்.

    இவர்களுக்கு குழந்தை இல்லை. வயதான தம்பதி இருவரும் பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். கடந்த 1½ மாதத்துக்கு முன்பு விலாசினி பணி ஓய்வு பெற்றார்.

    அவர்கள் வீட்டு வேலை செய்வதற்காக ஆந்திராவை சேர்ந்த சுரேஷ், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை வீட்டில் தங்க வைத்தனர். அவர்களுக்கு வீட்டின் அருகே தனி அறை ஒதுக்கப்பட்டது. அவர்களுடன் ஒரு மகனும் இருந்தான்.

    இந்த நிலையில் நேற்று காலை ஜெகதீசனும், விலாசினியும் வீட்டில் உள்ள அறையில் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அறையில் இருந்த பீரோ உடைந்து கிடந்தது.

    மேலும் அங்கு தங்கி வேலை பார்த்து வந்த ஆந்திரா தம்பதி சுரேஷ்- லட்சுமி ஆகியோர் மகனுடன் தலைமறைவாகி இருந்தனர்.

    அவர்கள் ஜெகதீசனையும், விலாசினியையும் கொலை செய்து விட்டு நகை- பணத்தை கொள்ளையடித்து தப்பி இருப்பது தெரிந்தது.

    இது குறித்து ஆவடி போலீசார் விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க சென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன், இணை கமி‌ஷனர் விஜய்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

    அவர்கள் தலைமறைவான சுரேசின் செல்போன் நம்பரை வைத்து விசாரணையை தொடங்கினர். இதில் அவன் கடந்த 24-ந் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஒருவருக்கு பேசி இருப்பது தெரிந்தது. தற்போது சுரேசின் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு உள்ளது.

    எனவே அவன் குடும்பத்துடன் விஜயவாடா தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றார்கள். இதையடுத்து தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்து உள்ளனர்.

    சுரேஷ் கடைசியாக பேசிய நபர் யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர்.

    கொலை நடந்த வீட்டில் எவ்வளவு நகை-பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை. ஜெகதீசனின் வீட்டுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் உறவினர்கள் வந்து சென்று இருக்கிறார்கள். அவர்களது வீட்டில் எவ்வளவு நகை-பணம் இருந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

    ஜெகதீசன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆந்திர தம்பதி சுரேஷ்-லட்சுமியை வீட்டு வேலைக்கு சேர்த்து உள்ளார். சுரேசை ஆவடியை சேர்ந்த மேஸ்திரி ஒருவர் அறிமுகப்படுத்தி இருந்தார். அவரிடமும் விசாரணை நடக்கிறது.

    சுரேஷ், வீட்டு வேலைக்கு வருவதற்கு முன்பு காமராஜர் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக இருந்தார். இதன் பின்னரே ஜெகதீசன் வீட்டுக்குவேலைக்கு சேர்ந்து உள்ளார்.

    ஆரம்பத்தில் சுரேஷ் நன்றாக வேலை செய்வது போல் நடித்தார். இதனை நம்பிய ஜெகதீசன் சுரேசுடன் நன்கு பழகினார். இருவரும் சேர்ந்து மது குடிக்கும் அளவுக்கு நெருக்கமாகி உள்ளனர். வங்கி மற்றும் உறவினர் வீடுகளுக்கும் சுரேசை ஜெகதீசன் அழைத்து சென்று இருக்கிறார்.

    சில நாட்களுக்கு முன்பு காமராஜர் நகர் பகுதியில் உள்ள மது பாரில் 2 பேரும் சேர்ந்து மது குடித்து உள்ளனர். இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி உள்ளது.

    சுரேஷ் நண்பர் போன்று பழகியதால் ஜெகதீசன் தனது குடும்ப விபரங்களை அவருடன் பகிர்ந்து இருக்கலாம் என்று தெரிகிறது.

    எனவே நகை-பணத்துக்கு ஆசைப்பட்டு ஜெகதீசனையும், அவரது மனைவியையும் கொலை செய்து ஆந்திர தம்பதி சுரேஷ்-லட்சுமி தப்பி சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.

    கொலை திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு அவர்கள் ஜெகதீசன் வளர்த்த 2 நாய்களுக்கு மயக்க மருந்து கொடுத்து இருக்கிறார்கள். இதில் ஒரு நாய் மயங்கியது. ம ற்றொரு நாயை அவர்கள் அடித்து விரட்டி இருக்கிறார்கள். மயக்கமடைந்த நாய் நேற்று மதியம்தான் சகஜ நிலைக்கு திரும்பியது.

    இந்த கொலை சம்பவத்தில் ஆந்திர தம்பதியுடன் கூட்டாளிகள் வேறு சிலரும் சேர்ந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் ரெயில் நிலையங்களில் இருந்து தப்பி சென்று இருக்கலாம் என்பது தெரிகிறது. இதையடுத்து ஆவடி, சென்ட்ரல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். #AvadiMurder
    சென்னை ஆவடியில் நகை மற்றும் பணத்துக்காக கணவன், மனைவி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #AvadiMurder
    திருநின்றவூர்:

    சென்னை ஆவடியில் இன்று காலை நடந்த கொடூர கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    ஆவடி சேக்காடு அய்யப்பன் நகர் மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி விலாசினி. இருவரும் தமிழ்நாடு அரசு அச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் சுமார் 1 ஏக்கர் நிலப்பரப்பில் இடம் வாங்கி அதில் பண்ணை வீட்டை கட்டி குடியேறினார்கள். முன் பகுதியில் வீட்டை கட்டி பின் பகுதியில் பெரிய தோட்டத்தையும் அமைத்திருந்தனர்.

    ஜெகதீசனுக்கு 65 வயது ஆகிறது. விலாசினிக்கு 60 வயது. வீட்டு வேலைகளை பார்ப்பதற்கு இருவரும் ஆட்களை நியமித்து இருந்தனர். கணவன்-மனைவியாக இருப்பவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை வீட்டிலேயே தங்க வைத்தனர்.

    கடந்த 3 மாதமாக வீட்டில் வேலை செய்து வந்த இருவர் திடீரென நின்றுவிட்டனர். இதனால் 10 நாட்களுக்கு முன்னர் ஆந்திராவை சேர்ந்த கணவன்-மனைவியை வேலைக்கு சேர்ந்தனர்.

    இன்று காலையில் நீண்ட நேரமாகியும் ஜெகதீசன், விலாசினி இருவரும் வெளியில் வரவில்லை. வேலையாட்களையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர்.

    அப்போது கணவன்- மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் அறையில் பிணமாக கிடந்தனர். அவர்களது தலையில் பலமாக தாக்கியதற்கான அடையாளங்கள் காணப்பட்டன.

    இணை கமி‌ஷனர் விஜய குமாரி, துணை ஆணையர் ஈஸ்வரன் ஆகியோரும் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது ஜெகதீசனும், விலாசினியும் தலையில் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. நகை-பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்தில் இருவரும் துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    கணவன்-மனைவி கொலை செய்யப்பட்ட பண்ணை வீடு.

    சுமார் 50 பவுன் நகைகளும், வீட்டில் இருந்த பணமும் கொள்ளை போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    ஜெகதீசனையும், விலாசினியையும் பார்த்துக் கொள்வதற்காக வேலைக்கு சேர்ந்த ஆந்திர தம்பதி வீட்டில் இல்லை. இருவரும் மாயமாகி விட்டனர். நகை- பணத்துக்காக அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையுண்ட ஜெகதீசன், விலாசினி இருவரின் செல்போன் எண்களை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது. அவர்கள் யார்-யாருடன் பேசி உள்ளனர்? என்பது பற்றிய தகவல்களை போலீசார் திரட்டி வருகிறார்கள்.

    இதற்கிடையே கணவன்- மனைவியை கொலை செய்ததாக கருதப்படும் ஆந்திர தம்பதி யார் என்பது அடையாளம் தெரிந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.

    குற்றவாளிகளை பிடிக்க ஆந்திர மாநிலத்துக்கும் தனிப்படை விரைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

    தனியாக வசித்து வந்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விலாசினி, ஜெகதீசனுக்கு 2-வது மனைவி ஆவார். சமீபத்தில்தான் அவர் பணி ஓய்வு பெற்றுள்ளார். இதற்காக அவருக்கு பணி ஓய்வு பணம் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. அந்த பணம் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை.

    ஜெகதீசனின் முதல் மனைவி பெயர் சுகுமாரி. இவர் அண்ணாநகரில் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். விலாசினிக்கு குழந்தைகள் இல்லை. #AvadiMurder
    ×